அடக்குதலால் கிளர்ந்தெழுந்துள்ள சீனாவின் உய்குர் இனம் July 12, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
திபெத் போன்று போராட்டம் நடந்துவரும் இன்னுமொரு சுதந்திரத்துக்கான போராட்டம் பெரியளவில் வெளியில் வந்திருக்கிறது. சீனாவின் மேற்குப்புற மாகாணமான ஜின்சியாங் மாகாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உலகுக்கு மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கெதிரான அடக்குதலை வெளிக் கொணர்ந்திருப்பதாகவே கொள்ள முடியும். சீனாவின் ஜின்சியாங் மாகாணத்திலுள்ள உய்குர் இன முஸ்லிம் அமைப்பினர் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை அடக்குவதற்கு சீன இராணுவம் மிக்க கடுமையாக முயன்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உய்குர் இன முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகவே இப்பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். (more…)
அமெரிக்க ரஷ்யத் தலைவர்களுக்கிடையில் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் July 11, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
உலகளவில் அணு ஆயுதமே பிரச்சினைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. சர்வதேச காவல் காரனாக இருக்கும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து விதமான மனித உரிமை நிறுவனங்கள் சர்வ÷துச தொண்டு நிறுவனங்களை வைத்தக் கொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. இது ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் மூலம “உலகுக்கு உணர்த்தப்பட்டிருந்தது.
இப்போது உலகிலுள்ள தமது எதிரி நாடுகளை தனது சாதகத் திட்டங்களுக்காக கூட்டுச் சேர்த்து வருகிறது. இதற்கு இந்த வாரத்தில் ரஷ்யாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த (more…)
மக்களின் ஜனநாயகத்துக்காக களமிறங்கிய ஹொண்டுராஸின் இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.1 comment so far
உலக நாடுகளின் அழுத்தம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தல்கள் ஹொண்டுராஸ் நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருமா இல்லையா என்பது தெளிவில்லாததாகவே இருக்கிறது.
இராணுவ ஆட்சியை நடத்தும் மியன்மார் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஹொண்டுராஸ் சாதாரணமானதே. ஆனாலும் இராணுவம் இருப்பது நாட்டு மக்களது ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக என்பதைச் சில வேளைகளில் பலர் மறந்து விடுகின்றனர். இதனை ஹொண்டுராஸ் இராணுவம் உலகுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தியிருப்பதாகவே உணர முடிகிறது.
இந்நிலையில், திடீர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஹொண்டுராஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஷிலேயாவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதைப்பற்றி யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாது என அதன் இடைக்கால ஜனாதிபதியான ரொபேட்டோ மிச்லெற்றி தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாட்களுக்குள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவேன் என்று நாடு கடத்தப்பட்ட ஜனாதிபதி ஷிலேயா அறிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இடைக்கால ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறார். (more…)
வன்முறைகள் தொடரும் என்ற எதிர்பார்புடன் வெளியேறும் அமெரிக்கப் படைகள் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை ஈராக் கோலாகலமாகக் கொண்டாடியது. அங்கு 30 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஜூன்30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சதாம் தலைமையிலான ஈராக் அரசு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. அதனால் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து (more…)
இருதரப்பு பேச்சுக்களில் தங்கியுள்ள மத்திய கிழக்கின் அமைதி July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
பலஸ்தீனம் என்ற நாடு விரைவில் அமைக்கப்படும் என்று மீண்டும் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்ரேலின் ஆதிக்க நோக்கத்தை முறியடிக்கும் வகையில் பலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் சலாம் பயாட் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலின் புதிய பிரதமராக பென்ஜமின் நெத்தன் யாஹூ தெரிவு செய்யப்பட்டால் பலஸ்தீனத்தில் அமைதி நிலை திரும்பும். அந்த மக்களுக்கு ஒரு நிம்மதி நிறைந்த வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த இராணுவ பலம் இல்லாத பலஸ்தீனத்தையே இஸ்ரேல் அங்கீகரிக்கும் என்ற கருத்து மத்திய கிழக்கில் பெரும் குழப்பத்தைக் கொண்டுவந்திருந்தது. இன்நிலையில் பாலஸ்தீனப்பிரதமர் பலஸ்தீன நாடு குறித்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூவின் உரையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றிருந்தார். நெத்தன் யாஹூ வின் கருத்தானது சமாதான முயற்சிகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த வாரத்தில் பென்ஜ மின் நெத்தன் யாஹூ பலஸ்தீனை ஒரு தனி பிராந்தியமாக ஏற்றுக் கொள்ளத் தயார். அதேபோல் இஸ்ரேலை தங்களின் நாடாக பஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இராணுவ பலமற்றதாக பலஸ்தீனம் மாற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். (more…)
வஸிரிஸ்தான் நோக்கி பாக்.இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
வஸிரிஸ்தானை நோக்கி அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அங்கிருந்து மக்களை வெளியேறுமாறும் பாக். அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள வஸிரிஸ்தானில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
அப்பகுதியில் பதுங்கி இருக்கும் தலிபான்களை விரட்யடிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாக். இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்குமிடையில் நடந்துவரும் சண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அங்கு வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவிப்பு July 9, 2009
Posted by Athiran in செய்திகள்.add a comment
இலங்கையில் செயற்பட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை அவற்றின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு ஏற்ப கிழக்கிலுள்ள தனது முக்கியமான நான்கு கிளைகளை மூடி வீடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கிழக்கில் மாத்திரம் 150 வரையான பணியாளர்கள் செங்சிலுவைச் சங்கத்திற்குப் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் யுத்தம் நடைபெறும் காலத்திலேயே தேவைப்பட்டதாகவும் அதற்கான தேவை யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தேவையற்றதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தலை இலங்கையின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமர சிங்க விடுத்திருக்கிறார். அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களில் செஞ்சிலுவைச் சங்கம் முதன்மைனயானது. இதே நேரம் இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்களுக்கான பெரும் தேவை இருப்பதாகவும், அந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய தேவைகள் குறத்து தாம் செயற்படப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தி வருவதாக ஜெனிவா தலைமையகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதே Nநுரம் அரசாங்கங்களுடன் இணைந்து செய்ற்ட:டு வரும் அமைப்பான நாங்கள் இலங்கையை விட்டுப் போகப் போவதில்லை தேவையாக உள்ள அனைத்து விடயங்களுக்காகவும் நாங்கள் செயற்பட விருக்கிNறூம் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தபணியாளர் குறைப்பு நடவடிக்கைகளின் பின்னர் எத்தனை பேர் இலங்ககையில் இருப்பார்கள் போன்ற கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.



















![Validate my RSS feed [Valid RSS]](valid-rss.png)

