நீதிமன்றம் தீர்மானிக்கப் போகும் ஷிலேயாவின் ஜனாதிபதிப் பதவி November 21, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஹொண்டுராஸ் நாட்டின் நாடுகடத்தப்பட்ட மானுவெல் ஷிலேயா செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் நாட்டுக்குள் வந்தவு டன் அங்குள்ள பிரேஸில் தூதரகத்தினுள் தஞ்சம் புகுந்தார். எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர்வேன் என்று உறுதியாக இருக்கின்ற ஷிலோயா விடாமுயற்சியுடன் இருக்கிறார்.
இந்நிலையில் ஹொண்டுராஸில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்பே பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மனுவல் ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டு காங்கிரஸ் இந்தவாரத்தில் தெரிவித்தது.
இம்மாதம் 29 ஆம் திகதி இங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பின்னர் டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலேயே ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து தீர்மானிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ஜோஸ் சாவேட்ரா கூறியிருக்கிறார்.
இதே வேளை தேர்தலுக்குப் பின்னர் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்பார். அதுவரை ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவதா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் அடுத்தவாரம் வழங்கவுள்ள தீர்ப்பே தீர்மானிக்கும் என்றும் தெரிகிறது. (more…)
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல் November 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும். (more…)
அப்பாஸின் அரசியல் ஒதுங்கல் மேற்குலகில் சலனத்தை ஏற்படுத்துகின்றது November 17, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மத்திய கிழக்கு இருதரப்புப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் வித்தியாசமானதும் புதியதுமான அணுகு முறையை ஒபாமா நிருவாகம் கையாளவேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வெளிவிவகாரக் கொள்கையில் உள்ள சிக்கல்களை கடந்த 10 மாத ஆட்சியில் இஸ்ரேலிய பலஸ்தீன விவகாரத்திற்கு முடிவு அல்லது சமாதானத்தை எற்படுத்த முடியாததை ஒபாமா தலைமையிலான ஆட்சி காட்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் கிலாரி கிளின்ரன் மத்திய கிழக்குக்கு விஜயம் செய்திருந்த வேளை பலஸ்தீன ஜனாதிபதி கிளின்ரனின் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் இஸ்ரேல் தமது குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத வரையில் பேச்சுக்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தார். (more…)
உங்களுக்கே இவ்வுலகம் 1 – முட்டாள்களை மதியுங்கள் November 17, 2009
Posted by Athiran in உங்களுக்கே இவ்வுலகம்..add a comment
தனக்கு ஆதரவானவர்களைப் பயன் படுத்துவதை விடுத்து தன்னுடன் குறிப்பிட்ட சிலர் உறவாடுகிறார்கள் என்று காட்டிக் கொண்டு இருப்பவருடன் நீண்டகாலமாக நான் இருந்திருக்கிறேன் என்பது கவலையைத் தருகிறது.
யாரெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக எல்லோருடனும் பழகுகிறார்களோ அவர்களையெல்லாம் பிரித்து துருவங்களாக்கி விடுவது நல்லதொரு இராஜதந்திரத்தனமாகவே தெரிகிறது.
இது அரசியலில் சிறந்ததொரு நடவடிக்கையாக இருக்கிறது. இருப்பினும் இந்த நடைமுறையைக் கையாளுபவரைச் சரியாக இனங்கண்டு கொள்ள சிரமப்படுகின்றனர் என்பதே உண்மையானது. (more…)
மேற்குலகின் சோசடியை நிரூபித்திருக்கும் ஆப்கானிஸ்தான் November 16, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் மீள் வாக்களிப்பு நாளை நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய்க்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இரண்டாம் கட்ட வாக்களிப்பு ரத்து செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக ஹமீத் அல்கர்ஸாய் மீண்டும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
அதன்படி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஹமீத் அல் கர்ஸாய் பதவியேற்று இருக்கிறார். தனது பதவியை மீண்டும் பொறுப்பேற்ற ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய் இன ஐக்கியம் மிக்க தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காக உறுதியாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மற்றும் மேற்குலக நாடுகளின் தலைவர்களும் ஹமீத் அல் கர்ஸாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். (more…)
பலஸ்தீனம் முன் நிபந்தனையைக் கைவிட வேண்டிய நேரம் November 16, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மரபு ரீதியான விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவே அனைவரும் விரும்புகின்றனர். இருப்பினும் அதற்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு உலக நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் உதாரணமானதாகும்.
இந்த வாரத்தில் மத்திய கிழக்கில் முக்கியத்துவமான நடவடிக்கைகள் நடைபெற்றன. அவற்றில் பலஸ்தீன விவகாரத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தவறு செய்பவன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை பாதிக்கப்பட்டவனே அமைதியாக இருக்க வேண்டும் என்பது போல் நடைபெற ஏற்பாடாகி வரும் பேச்சு வார்த்தைக்கு முன்நிபந்தனை விதிக்கக்கூடாது என பலஸ்தீனத்திற்கு ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார். (more…)
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம். October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
பாகிஸ்தானில் தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள் October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 இராணுவ வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே அமைந்துள்ள ராவல்பிண்டி நகரத்தில் அந்த நாட்டின் இராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. (more…)
அமெரிக்காவின் கைக்குவரும் அணுஆயுத விவகாரம். October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.
ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு அமெரிக் காவே காரணம். வடகொரியாவின் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா.நீண்ட தூர ஏவுகணைப்பரிசோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டமை காரணமாக ஏற்பட்ட சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகளால் இந்த வருட முற்பகுதியில் ஆறு நாடுகள் பங்கு கொள்ளும் அணுத்திட்டப்பேச்சுக்களிலிருந்து வட கொரியா விலகியிருந்தது. (more…)
பாகிஸ்தானில் ஐ.நா.அலுவலகம் மீதான் தாக்குதல் கூறும் செய்தி October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தலிபான் போராளிகளின் பாகிஸ்தான் பிராந்திய முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு பழிதீர்க்கப் போவதாக புதிய தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுத் சவால் விடுத்திருந்த நிலையில் பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஐ.நா. அதிகாரி உட்பட 5பேர் பலியாகினர்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு புதிய தலைவராக ஹக்கிமுல்லா மெஹ்கத் பொறுப்பேற்றிருந்தார். தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைகளி>ல் ஈடுபட்டு வரும் அமெரிக்காவையும் பிரிட்டனையும் எச்சரிக்கும் பொருட்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்த ஐ.நா. தலைமையகத்தை தாம் தாக்கியதாக தலிபான்கள் தெரிவித்திருக்கின்றனர். (more…)
கினியாவில் இராணுவ ஆட்சியாளர்களின் அட்டகாசத்துக்குப் பலியான போராட்டக்காரர்கள். October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் கினியாவில் திங்கட்கிழமை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு இரு தினங்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரிய கூட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அரசாங்கம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களையும் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த அறிவித்தலை இராணுவ ஆட்சியாளர் கப்டன் மௌஸா டாடிஸ் விடுத்தார். அதே வேளை கினியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது ஒழுங்கைக் குலைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
சத்துருக்கொண்டான் படுகொலையின் 19ஆவது நினைவு October 6, 2009
Posted by Athiran in சிவராம், செய்திகள், தொகுப்புகள், புகைப்படங்கள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sathurukondan massacre, Sri Lanka, Trincomalee
add a comment
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.
அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.
றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.
அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.
அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.
சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.
மிகுதிப்படங்களைப் பார்க்க

















