அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய தினக்குரல் சிவராமுக்கு எழுதியதும் அவரது பதிலும். July 10, 2008
Posted by Athiran in சிவராம்.Tags: Amparai, Batticaloa, East, News, Sivaram, Sri Lanka, Tamil Nation, Tamils, Taraki, Thinakkural, Trincomalee
trackback
தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்
26 October 2004
மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிங்கள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதில் விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்த நோக்கத்திற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து ‘தேதுன்ன” என்ற பத்திரிகையையும் அவர்கள் வெளியிட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இக்குழுவினர் சில வாரங்களுக்கு முன்னர் மல்வத்தை பீடாதிபதியைச் சந்திக்க கண்டிக்குச் சென்ற வேளை சில பிக்குமார் உட்பட இனவெறிக் கும்பல் ஒன்று அடாவடித்தனத்தில் இறங்கியது. அக்கும்பலின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்வத்தை பீடாதிபதியைச் சந்தித்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவருக்கு விளக்கிஇ விரைவில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தைத் து}ண்டுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அஸ்கிரிய பீடாதிபதி இவர்களைச் சந்திக்க முடியாதளவுக்கு தனக்கு வேலைப் பளு இருப்பதாகக் கூறி சந்திப்பைத் தவிர்த்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் அரசாங்கம் ஏதுவானஇ அரசியல் சூýழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. தென்னிலங்கை அரசியல் நிலைவரத்தை சர்வதேச சமூகமும் புரிய ஆரம்பித்து விட்டது. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்கின்ற அதேவேளை மீண்டும் போருக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராயில்லை. இதனிடையே விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தேக்க நிலையடைந்திருக்கும்) சமாதான முயற்சிகள் குறித்த தங்களின் நிலைப்பாடுகளை விளக்கிக் கூறி வருகின்றார்கள்.
இத்தகையதொரு பின்புலத்தில் கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி தமிழ்ப் பத்திரிகையொன்றின் ஞாயிறு இதழில்இ பிரபல அரசியல் ஆய்வாளர் டி.சிவராம் கடந்த சில வாரங்களாக எழுதிவரும் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து எமது பிரதிபலிப்பை வெளியிடுவது என நாம் கருதுகின்றோம்.
26 October 2004
மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிங்கள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதில் விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்த நோக்கத்திற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து ‘தேதுன்ன” என்ற பத்திரிகையையும் அவர்கள் வெளியிட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இக்குழுவினர் சில வாரங்களுக்கு முன்னர் மல்வத்தை பீடாதிபதியைச் சந்திக்க கண்டிக்குச் சென்ற வேளை சில பிக்குமார் உட்பட இனவெறிக் கும்பல் ஒன்று அடாவடித்தனத்தில் இறங்கியது. அக்கும்பலின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்வத்தை பீடாதிபதியைச் சந்தித்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவருக்கு விளக்கிஇ விரைவில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தைத் து}ண்டுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அஸ்கிரிய பீடாதிபதி இவர்களைச் சந்திக்க முடியாதளவுக்கு தனக்கு வேலைப் பளு இருப்பதாகக் கூறி சந்திப்பைத் தவிர்த்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் அரசாங்கம் ஏதுவானஇ அரசியல் சூýழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. தென்னிலங்கை அரசியல் நிலைவரத்தை சர்வதேச சமூகமும் புரிய ஆரம்பித்து விட்டது. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்கின்ற அதேவேளை மீண்டும் போருக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராயில்லை. இதனிடையே விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தேக்க நிலையடைந்திருக்கும்) சமாதான முயற்சிகள் குறித்த தங்களின் நிலைப்பாடுகளை விளக்கிக் கூறி வருகின்றார்கள்.
இத்தகையதொரு பின்புலத்தில் கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி தமிழ்ப் பத்திரிகையொன்றின் ஞாயிறு இதழில்இ பிரபல அரசியல் ஆய்வாளர் டி.சிவராம் கடந்த சில வாரங்களாக எழுதிவரும் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து எமது பிரதிபலிப்பை வெளியிடுவது என நாம் கருதுகின்றோம்.
தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாiர்களை விளக்குவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு முயற்சியுமே பயனளிக்கப் போவதில்லை என்பதே சிவராமின் கருத்தாக இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசியம் மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது. பௌத்தமின்றி சிங்களத் தேசியத்தைப் பற்றி நாம் பேச முடியாது.
சிங்கள பௌத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்றும் ஆய்வாளர் சிவராம் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
இலங்கைத் தீவு சிங்கள பௌத்தத்திற்கே உரியது என்பதும் தமிழ் விரோதமும் பல நு}ற்றாண்டுகளாகப் பரப்பப்பட்டு வந்த கருத்துகள் என்று கூறும் அவர் தமிழ் மக்களின் நியாயப10ர்வமான அரசியல் அபிலாஷைகள் இன்னல்கள் குறித்து சிங்கள மக்களிடையே நாம் இடையறாது பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது ஆட்சியாளரின் சிங்கள பௌத்த தேசியம் என்ற கற்பித்தலில் இருந்து விடுபட்டு சரியான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு உறுதுணை செய்வார்கள் என்ற எண்ணம் வீணானது என்று வலியுறுத்த முயற்சிக்கின்றார்.
உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியிலுள்ள சிந்தனைக் குழப்பம் செயற்குழப்பம் ஆகிய வற்றுக்கு சிங்கள பௌத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாயப் பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு காரணம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தவறும் எவருமே சிங்கள அரசியல் சமுதாயத்தின் இன்றைய போக்குக் குறித்து உருப்படியான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது. இலங்கையில் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் தோற்கடிப்பதில் சிங்களத்தையும் பௌத்தத்தையும் ஒன்று கலந்து புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே விரோதமான கருத்தியலை முன்னெடுத்த வக்கிர சக்திகளே காரணமாயிருந்தன. இன்றும் நிலைமை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால்இ இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக ஆயுதமேந்திப் போராடிவந்த விடுதலைப்புலிகள் அரசாங்கப் படைகளுடனான போர்நிறுத்தத்தின் பின்னரான சஞ்சலமான அமைதிச் சூýழ்நிலையில் தங்களது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டுமென்று அக்கறை காட்டும் போது அந்த அக்கறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடய கருத்துக்களை எதற்காக சிவராம் வலிந்து முன்வைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக சிங்கள அரசியல் அதிகார வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ள போதிலும் இருபது வருட கால உள்நாட்டுப் போரில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அவலங்களின் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீள முடியாமல் திணறுகின்ற நிலைமையிலும் கூடஇ தமிழ் மக்கள் சிங்கள அரசியல் சமுதாயத்துடனான ஊடாட்டத்தின் மூýலம் அரசியல் தீர்வுகளைக் காண்பதில் நம்பிக்கையிழக்கவில்லை என்ற தோற்றப்பாடு தமிழ் மக்களின் போராட்டத்தின் அரசியல் நியாயத்துக்கு சர்வதேச சமூýகத்தின் மத்தியில் வலுவைச் சேர்க்கும் என்று ஆய்வாளர் சிவராம் நம்பவில்லையா? தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்வதற்கு அழுங்குப் பிடியாக மறுத்து சமாதானத்தை எதிரிகளாக தென்னிலங்கை அரசியல் சமுதாயமே விளங்குகிறது என்று உலகுக்கு மேலும் அம்பலப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம் என்று அவரால் ஏன் கருத முடியவில்லை?
அத்துடன்இ தற்போதைய சமாதான முயற்சிகளும் விடுதலைப்புலிகள் அவை தொடர்பில் கடைப்பிடிக்கும் அனுகுமுறைகளும் இரு தசாப்தகால ஆயுதப் போராட்டத்தின் சாதகமான விளை பயன்களைப் பறிகொடுக்காதிருப்பதற்கான தந்திரோபாயம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 2001 செப்டெம்பர் 11க்குப் பின்னரான உலகில் அமெரிக்காவும் அதன் மேற்குலக நேச அணிகளும் உலக வரைபடத்தில் இருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கும் (அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயப10ர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான) வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் எவரும் இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பில் சரியான அனுமா னத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.
சிங்கள மக்களைக் காலங்காலமாக தவறான வழியில் இட்டுச் சென்ற சிங்கள அரசியல் அதிகாரவர்க்கத்துடன் விடுதலைப்புலிகள் பேசுவது குறித்து என்றுமே கிஞ்சித்தும் கவலை கொள்ளாத ஆய்வாளர் சிவராம் சிங்கள மக்களை அனுகும் விடுதலைப்புலிகளின் முயற்சிகளை வரவேற்காத பின்னணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது
சிவராமின் நிலைப்பாட்டையே ஏற்றுக் கொள்வதானால்இ இன்றைய சர்வதேச நிலைவரங்களின் பின்புலத்தில் அவர் தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் அடுத்து என்ன செய்யவேண்டும்? ஒருதலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்க வேண்டுமா? ஒருதலைப்பட்ச சுதந்திரத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும்? இவற்றில் எந்தவொரு மார்க்கத்தையும் பின்பற்றினால் தற்போதைய சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய விளைவுகள் எவை? சிவராம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.
சிவராம் (தராக்கி) – தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பிய கேள்விகள் குறித்து….
வாரவெளியீடு 5 ழேஎநஅடிநச 2004தேசியம் பற்றி வீரகேசரி வார இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரை தொடர்மீது கடந்த செவ்வாயன்று (26.10.2004) தினக்குரல் பத்திரிகை ஒரு நீண்ட ஆசிரிய தலையங்கம் வரைந்துள்ளது..
இன்னல்களைப் பற்றியும் அரசியல் அவாவுதல்களைப் பற்றியும் நாம் எந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்தாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை எனவும்
இதற்கு சிங்கள தேசியத்தின் அடிப்படைத் தன்மையே காரணம் எனவும் நான் எழுதியதை தினக்குரல் கடும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
சமூகத்தில் புதிய எண்ணங்களையும் பயனுள்ள விவாதங்களையும் ஓரளவேனும் தூண்டிவிட எனது எழுத்துக்கள் பயன்பட்டால் அதுவே பெரிய விடயம் எனக் கூறிக்கொண்டு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விகளைக் கவனிப்போம்‘ .
இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக ஆயுதமேந்திப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைகளுடனான போர்நிறுத்தத்தின் பின்னரான சஞ்சலமான அமைதிச் சூழ்நிலையில் தங்களது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டுமென்று அக்கறை காட்டும் போது அந்த அக்கறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கருத்துக்களை எதற்காக சிவராம் வலிந்து முன்வைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை“.
தினக்குரல்| ஆசிரியர் தலையங்கம் எழுப்பியிருக்கும் முதலாவது கேள்வி. இதற்கான விடை அடுத்த நாள் (27.10.2004) ~தினக்குரல்| ஆசிரியர் தலையங்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது‘ .
தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் சுயாட்சிக்கான அவர்களின் கோரிக்கையையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு உந்துதல் அளிக்கக்கூடியதான வெகுஜன இயக்கமொன்றை தென்னிலங்கையில் கட்டியெழுப்ப முடியாமல் போய்விட்டது என்பது குறித்து பெரும் கவலை தெரிவித்த வாசுதேவஇ அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுவிட்டமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சொன்னார்” என தினக்குரல் ஆசிரியர்தலையங்கம் எழுதிச் செல்கிறது. சிங்களத் தேசியம் பற்றி நான் கூறியதை இது நிறுவுகிறதன்றோ.
தேசத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளுடனும் கிளர்ச்சியாளர்களுடனும் பழகியதன் அடிப்படையிலும் இலங்கை முழுவதற்குமான சமூக விடுதலைக்காக அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலுமே நான் எனது கருத்துகளை முன்வைத்தேன்.
15 வருடங்களாக தென்னிலங்கையின்ஆங்கில ஏடுகளில் தொடர்ந்தெழுதி வந்ததில் கிடைத்த அனுபவங்கள் எனது மேற்படி கருத்துகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. கிழமைக்குக் கிழமை கருத்தரங்கிற்குக் கருத்தரங்கு எமது பிரச்சினையை ஆங்கிலத்தில் எழுதியும் பேசியும் கண்டபயன் ஏதுமில்லை என சலித்து நான் சிறிதுகாலம் என்னுடைய ~தராக்கி| பத்தியை எழுதாது விட்டதுமுண்டு.
கிடைத்த அனுபவங்களையும் அதன் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட
பாடங்களையும் எனது மக்களுக்குக் கூற வேண்டுமென்று எண்ணினேன். அவ்வளவே. எனது கருத்துக்கு மாறான அனுபவங்களையும் ஆதாரங்களையும் தர்க்கங்களையும் தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் முன்வைக்குமேயானால் நன்றியுடையவனாவேன். அது பயனுள்ளது.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறுகிறது‘….
சிங்கள மக்களைக் காலங்காலமாக தவறான வழியில் இட்டுச் சென்ற அரசியல் அதிகார வர்க்கத்துடன் விடுதலைப்புலிகள் பேசுவது குறித்து என்றுமே கிஞ்சித்தும் கவலை கொள்ளாத ஆய்வாளர் சிவராம் சிங்கள மக்களை அணுகும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளை வரவேற்காததின் பின்னணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.”
வார இதழில் நான் முதன் முதலாக எழுதிய கட்டுரைத்தொடரில் புலிகளின் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றியும் அமைதிப் பேச்சின் இன்னோரன்ன விடயங்கள் பற்றியும் தினக்குரல் ஆசிரியர் நேரங்கிடைக்கும்போது சற்றே நோக்குவாராயின் அவரது கூற்று எந்தளவிற்கு தவறு என்பது புரியும்.
கீழ்வரும் கேள்விகளை என்மீது தொடுத்துள்ளது தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்‘
சிவராமின் நிலைப்பாட்டையே ஏற்றுக்கொள்வதானால்இ இன்றைய சர்வதேச நிலைவரங்களின் பின்புலத்தில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் அடுத்து என்ன செய்யவேண்டும்? ஒரு தலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்க வேண்டுமா? ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடனம் செய்யவேண்டுமா? இவற்றில் எந்தவொரு மார்க்கத்தையும் பின்பற்றினால் தற்போதைய சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் எவை? சிவராம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.”
மக்கள் ஒரு தலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்கத் தேவையே இல்லை. அந்த வேலையை இப்பொழுதே சிறிலங்கா படைத்துறையின் உளவியற் போர் பணியகம் தொடங்கி முன்னெடுத்து வருகிறது. இது நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.
நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்லஇ அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன். எமக்குத் தேவையான கருத்துகளை விவாதிப்பதற்கான களத்தை மேலும் விரிவாக்கியதற்கு தினக்குரலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசியம் மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது. பௌத்தமின்றி சிங்களத் தேசியத்தைப் பற்றி நாம் பேச முடியாது.
சிங்கள பௌத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்றும் ஆய்வாளர் சிவராம் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
இலங்கைத் தீவு சிங்கள பௌத்தத்திற்கே உரியது என்பதும் தமிழ் விரோதமும் பல நு}ற்றாண்டுகளாகப் பரப்பப்பட்டு வந்த கருத்துகள் என்று கூறும் அவர் தமிழ் மக்களின் நியாயப10ர்வமான அரசியல் அபிலாஷைகள் இன்னல்கள் குறித்து சிங்கள மக்களிடையே நாம் இடையறாது பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது ஆட்சியாளரின் சிங்கள பௌத்த தேசியம் என்ற கற்பித்தலில் இருந்து விடுபட்டு சரியான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு உறுதுணை செய்வார்கள் என்ற எண்ணம் வீணானது என்று வலியுறுத்த முயற்சிக்கின்றார்.
உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியிலுள்ள சிந்தனைக் குழப்பம் செயற்குழப்பம் ஆகிய வற்றுக்கு சிங்கள பௌத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாயப் பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு காரணம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தவறும் எவருமே சிங்கள அரசியல் சமுதாயத்தின் இன்றைய போக்குக் குறித்து உருப்படியான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது. இலங்கையில் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் தோற்கடிப்பதில் சிங்களத்தையும் பௌத்தத்தையும் ஒன்று கலந்து புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே விரோதமான கருத்தியலை முன்னெடுத்த வக்கிர சக்திகளே காரணமாயிருந்தன. இன்றும் நிலைமை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால்இ இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக ஆயுதமேந்திப் போராடிவந்த விடுதலைப்புலிகள் அரசாங்கப் படைகளுடனான போர்நிறுத்தத்தின் பின்னரான சஞ்சலமான அமைதிச் சூýழ்நிலையில் தங்களது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டுமென்று அக்கறை காட்டும் போது அந்த அக்கறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடய கருத்துக்களை எதற்காக சிவராம் வலிந்து முன்வைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக சிங்கள அரசியல் அதிகார வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ள போதிலும் இருபது வருட கால உள்நாட்டுப் போரில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அவலங்களின் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீள முடியாமல் திணறுகின்ற நிலைமையிலும் கூடஇ தமிழ் மக்கள் சிங்கள அரசியல் சமுதாயத்துடனான ஊடாட்டத்தின் மூýலம் அரசியல் தீர்வுகளைக் காண்பதில் நம்பிக்கையிழக்கவில்லை என்ற தோற்றப்பாடு தமிழ் மக்களின் போராட்டத்தின் அரசியல் நியாயத்துக்கு சர்வதேச சமூýகத்தின் மத்தியில் வலுவைச் சேர்க்கும் என்று ஆய்வாளர் சிவராம் நம்பவில்லையா? தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்வதற்கு அழுங்குப் பிடியாக மறுத்து சமாதானத்தை எதிரிகளாக தென்னிலங்கை அரசியல் சமுதாயமே விளங்குகிறது என்று உலகுக்கு மேலும் அம்பலப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம் என்று அவரால் ஏன் கருத முடியவில்லை?
அத்துடன்இ தற்போதைய சமாதான முயற்சிகளும் விடுதலைப்புலிகள் அவை தொடர்பில் கடைப்பிடிக்கும் அனுகுமுறைகளும் இரு தசாப்தகால ஆயுதப் போராட்டத்தின் சாதகமான விளை பயன்களைப் பறிகொடுக்காதிருப்பதற்கான தந்திரோபாயம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 2001 செப்டெம்பர் 11க்குப் பின்னரான உலகில் அமெரிக்காவும் அதன் மேற்குலக நேச அணிகளும் உலக வரைபடத்தில் இருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கும் (அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயப10ர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான) வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் எவரும் இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பில் சரியான அனுமா னத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.
சிங்கள மக்களைக் காலங்காலமாக தவறான வழியில் இட்டுச் சென்ற சிங்கள அரசியல் அதிகாரவர்க்கத்துடன் விடுதலைப்புலிகள் பேசுவது குறித்து என்றுமே கிஞ்சித்தும் கவலை கொள்ளாத ஆய்வாளர் சிவராம் சிங்கள மக்களை அனுகும் விடுதலைப்புலிகளின் முயற்சிகளை வரவேற்காத பின்னணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது
சிவராமின் நிலைப்பாட்டையே ஏற்றுக் கொள்வதானால்இ இன்றைய சர்வதேச நிலைவரங்களின் பின்புலத்தில் அவர் தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் அடுத்து என்ன செய்யவேண்டும்? ஒருதலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்க வேண்டுமா? ஒருதலைப்பட்ச சுதந்திரத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும்? இவற்றில் எந்தவொரு மார்க்கத்தையும் பின்பற்றினால் தற்போதைய சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய விளைவுகள் எவை? சிவராம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.
சிவராம் (தராக்கி) – தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பிய கேள்விகள் குறித்து….
வாரவெளியீடு 5 ழேஎநஅடிநச 2004தேசியம் பற்றி வீரகேசரி வார இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரை தொடர்மீது கடந்த செவ்வாயன்று (26.10.2004) தினக்குரல் பத்திரிகை ஒரு நீண்ட ஆசிரிய தலையங்கம் வரைந்துள்ளது..
இன்னல்களைப் பற்றியும் அரசியல் அவாவுதல்களைப் பற்றியும் நாம் எந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்தாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை எனவும்
இதற்கு சிங்கள தேசியத்தின் அடிப்படைத் தன்மையே காரணம் எனவும் நான் எழுதியதை தினக்குரல் கடும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
சமூகத்தில் புதிய எண்ணங்களையும் பயனுள்ள விவாதங்களையும் ஓரளவேனும் தூண்டிவிட எனது எழுத்துக்கள் பயன்பட்டால் அதுவே பெரிய விடயம் எனக் கூறிக்கொண்டு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விகளைக் கவனிப்போம்‘ .
இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக ஆயுதமேந்திப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைகளுடனான போர்நிறுத்தத்தின் பின்னரான சஞ்சலமான அமைதிச் சூழ்நிலையில் தங்களது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டுமென்று அக்கறை காட்டும் போது அந்த அக்கறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கருத்துக்களை எதற்காக சிவராம் வலிந்து முன்வைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை“.
தினக்குரல்| ஆசிரியர் தலையங்கம் எழுப்பியிருக்கும் முதலாவது கேள்வி. இதற்கான விடை அடுத்த நாள் (27.10.2004) ~தினக்குரல்| ஆசிரியர் தலையங்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது‘ .
தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் சுயாட்சிக்கான அவர்களின் கோரிக்கையையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு உந்துதல் அளிக்கக்கூடியதான வெகுஜன இயக்கமொன்றை தென்னிலங்கையில் கட்டியெழுப்ப முடியாமல் போய்விட்டது என்பது குறித்து பெரும் கவலை தெரிவித்த வாசுதேவஇ அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுவிட்டமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சொன்னார்” என தினக்குரல் ஆசிரியர்தலையங்கம் எழுதிச் செல்கிறது. சிங்களத் தேசியம் பற்றி நான் கூறியதை இது நிறுவுகிறதன்றோ.
தேசத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளுடனும் கிளர்ச்சியாளர்களுடனும் பழகியதன் அடிப்படையிலும் இலங்கை முழுவதற்குமான சமூக விடுதலைக்காக அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலுமே நான் எனது கருத்துகளை முன்வைத்தேன்.
15 வருடங்களாக தென்னிலங்கையின்ஆங்கில ஏடுகளில் தொடர்ந்தெழுதி வந்ததில் கிடைத்த அனுபவங்கள் எனது மேற்படி கருத்துகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. கிழமைக்குக் கிழமை கருத்தரங்கிற்குக் கருத்தரங்கு எமது பிரச்சினையை ஆங்கிலத்தில் எழுதியும் பேசியும் கண்டபயன் ஏதுமில்லை என சலித்து நான் சிறிதுகாலம் என்னுடைய ~தராக்கி| பத்தியை எழுதாது விட்டதுமுண்டு.
கிடைத்த அனுபவங்களையும் அதன் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட
பாடங்களையும் எனது மக்களுக்குக் கூற வேண்டுமென்று எண்ணினேன். அவ்வளவே. எனது கருத்துக்கு மாறான அனுபவங்களையும் ஆதாரங்களையும் தர்க்கங்களையும் தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் முன்வைக்குமேயானால் நன்றியுடையவனாவேன். அது பயனுள்ளது.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறுகிறது‘….
சிங்கள மக்களைக் காலங்காலமாக தவறான வழியில் இட்டுச் சென்ற அரசியல் அதிகார வர்க்கத்துடன் விடுதலைப்புலிகள் பேசுவது குறித்து என்றுமே கிஞ்சித்தும் கவலை கொள்ளாத ஆய்வாளர் சிவராம் சிங்கள மக்களை அணுகும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளை வரவேற்காததின் பின்னணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.”
வார இதழில் நான் முதன் முதலாக எழுதிய கட்டுரைத்தொடரில் புலிகளின் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றியும் அமைதிப் பேச்சின் இன்னோரன்ன விடயங்கள் பற்றியும் தினக்குரல் ஆசிரியர் நேரங்கிடைக்கும்போது சற்றே நோக்குவாராயின் அவரது கூற்று எந்தளவிற்கு தவறு என்பது புரியும்.
கீழ்வரும் கேள்விகளை என்மீது தொடுத்துள்ளது தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்‘
சிவராமின் நிலைப்பாட்டையே ஏற்றுக்கொள்வதானால்இ இன்றைய சர்வதேச நிலைவரங்களின் பின்புலத்தில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் அடுத்து என்ன செய்யவேண்டும்? ஒரு தலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்க வேண்டுமா? ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடனம் செய்யவேண்டுமா? இவற்றில் எந்தவொரு மார்க்கத்தையும் பின்பற்றினால் தற்போதைய சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் எவை? சிவராம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.”
மக்கள் ஒரு தலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்கத் தேவையே இல்லை. அந்த வேலையை இப்பொழுதே சிறிலங்கா படைத்துறையின் உளவியற் போர் பணியகம் தொடங்கி முன்னெடுத்து வருகிறது. இது நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.
நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்லஇ அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன். எமக்குத் தேவையான கருத்துகளை விவாதிப்பதற்கான களத்தை மேலும் விரிவாக்கியதற்கு தினக்குரலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



















Comments»
No comments yet — be the first.