jump to navigation

சிறு குழந்தைகளின் கண்ணீர் துளிகள் July 21, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , , , , , , , , , ,
trackback

காலத்தின் நீள் இருக்கைகளில்
வெறுமையுற்றியிருக்கும்
பொழுதுகள்
சாம்பல் மேடாகும் வாழ்வின்
ஆதாரங்கள்
மீட்சி பெற முடியாத
ஒரு கால தருணத்தில்
நீயும் கடப்பட்டு இறந்து
போனாய்…

கொடூரமான
வன்முறைகளுடன்
வாழநேர்ந்த நிர்பந்தங்கள்
உன்னத இலட்சியத்திற்காக
வாழ்ந்து உயர்ந்த
மனிதர்களை சாவு
அழித்து விடுவதில்லை…..

தராக்கி
போன்ற மாமனிதர்களின்
சாவு
மரணத்தின் சுவடுகளை
அழித்து எழுந்து நிற்கிறது.

ஏமாற்றமும்
வஞ்சகங்களும்
தந்திரங்களும்
துரோகங்களும்
தமிழ் இனத்தின் வேர்களை
அழித்துவிட போவதில்லை…

நம்
ஈழத்தின் பெறுமதியான
அழகிய கனவுகள்
சுக்கு நு}றாக்கப்படுகின்றன.

ஒரு தாராக்கியன்
உயிருக்கு முன்
ஆயிரம் தராக்கிகள்
பிறப்பார்கள்…

ஆக….
நடக்கும் எல்லா
அதிகாரங்களிலும்
வன்முறை கைகொண்டு
எதிர்ப்புணர்வின் கால்களுக்கு
பின்
சிறு குழந்தைகளின்
கண்ணீர் துளிகளின்
அலறல் கேட்டபடி
இருக்கின்றனது…!

ஆற்றாமையின்
கணங்களின் உள் தள்ளும்
மனித படுகொலையின்
பட்டியலை நியாயப்பாடுகளின்
பழி நாளைய
போரின் துயரத்தின் முன்
முடிவடையலாம்.

தலையில்
உட்புறத்தில்
சரிந்த துப்பாக்கி குண்டின்
இரத்தம் தோய்ந்த
இறுதி நினைவின்
மரணத்தின் போது
இருளினு}டாக
நீ மறுபடியும் ஒளியாய்
பிறப்பாய் தராக்கி….

நீ
ஒரு யுகத்தின்
விடியலுக்காக
விதைக்கப் பட்டிருக்கிறாய்….
மறுபடியும்

நீ
எங்கள் முன்
தோன்றுவாய்….

தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்ட சிவராம் சமீபத்தில் இலங்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய் ஆய்வியலாளர் என்ற நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டவர் சிவராம்.

புதிய காற்று ஆக 2005    மதுரை

Comments»

No comments yet — be the first.