இனத்துவ பாரபாடசத்துக்கெதிரான மாநாடும் மேற்குலக நாடுகளும். April 24, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: அமெரிக்கா, இனத்துவ மாநாடு, இராஜதந்திரிகள், இஸ்ரேல், ஈரான்., ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பா, சர்வதேச செய்தி ஊடகங்கள், சுவிஸ்லாந்து, ஜனாதிபதி, ஜெனிவா, தென்னாபிரிக்கா, பாலஸ்தீனம், பிரான்ஸ், மத்திய கிழக்கு, மஹ்மூத் அஹமத் நஜாத், மேற்குலக நாடுகள், யுத்தங்கள் இன முரண்பாடுகள், யூதக் குடியேற்றவாசிகள், யூதவாதம், Durban Declaration and Programme of Action (DDPA)
add a comment
உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்று வரும் பெரியளவான யுத்தங்கள், இதுவரைக்கும் கொடுமையான அழிவுகளைக் கொடுத்து துன்பங்களையும் பதிந்து வைத்திருக்கின்ற யுத்தங்கள் எல்லாமே இன முரண்பாடுகளாலேயே ஏற்பட்டிருந்தன.
கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது இனத்துவ மாநாடு நடைபெற்றது. அப்போது பல அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மாநாடு இனத்துவேஷத்துக்கானது என விமர்சனங்களுக்குள்ளானது. அத்துடன் அம் மாநாடு பலராலும் பகிஷ்கரிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நடைபெற்ற மாநாட்டினை யூதவாதத்தை பிரதிபலிப்பதாகவும் அதற்குச் சமனானதாகவும் மாற்றுவதற்கு சில நாடுகள் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தன. அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து போயின.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனத்துவத்துக்கான மாநாடு கடந்த திங்கட்கிழமை சுவிஸ்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை உலகின் சர்வாதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்றன பல பெரிய நாடுகள் பகிஷ்கரித்தன. இம் மாநாட்டில் ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30 முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் வெளிநடப்புச் செய்தனர். (more…)
காலம் கற்பழித்துவிடுகிறது. April 23, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: அஸ்த்திவாரங்கள், கற்பனைகள், கற்பழிப்பு, காலம், சிந்தனை, நாளை, புதிய மனிதன், மனச்சாட்சி, வக்கிரங்கள், வாழ்வு, வைராக்கியங்கள், Life, Mind
2 comments
வாழ்வின் வைராக்கியங்களுக்காகவே
வக்கிரங்களை வளர்த்துக்கொண்டு
காலம் கடத்துகிறேன்.
காலம் கற்பழித்துவிடுகிறது
நம் சிந்தனைகளை
கட்டாயம் கவனமாக
இருந்தேயாகவேண்டும்
மாற்றானைப்பார்த்து.
மனசைப்பாத்துக்கத்
தெரிந்த எனக்கு
மற்றவரைப்பார்க்கத்
தெரியலையோ என்று கவலை.
இது வெறுந்தனமானது
என்று தெரிந்திருந்தும்
சிந்தனை சிக்கலில்.
வெடித்துச் சிதறப்போகும்
என் கற்பனைகளின்
கட்டுமானத்தை எப்படிக்காப்பது.
…………………..!
வழிதேடுகிறேன்.
…………………………
நிரந்தரமான ஒரு
கூட்டத்தை மாத்திரமே
வைத்துக்கொள்ள
கற்றுக்கொள்ள வேண்டும்.
மனச்சாட்சியின் குரலாய்
என்னுள்ளிருக்கும்
அத்தனை அஸ்த்திவாரங்களையும்
உடைத்தாக வேண்டிய
நிலைப்பாட்டை நான்
மாற்றி விடுகிறேன்.
நாளைக்கே
நான் ஒர் புதிய மனிதனாக
மாறிவிடுவதற்காக.
23.04.2009
கயாங்களின் பித்தலாட்டம். April 20, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: அன்பு, காயங்கள், பித்தலாட்டம்., வாழ்க்கை, Life, Mind, moon, normal life
1 comment so far
அடிக்கட்டைகளைத்தேடி
விறகு பொறுக்கிய
அந்த நாட்களில்
கால்களில் தான்
எத்தனை காயங்கள்.
காணாமல்போன
எனது வாழ்க்கையின்
நாட்களைத் தேடுகையிலும்
அப்படித்தான்.
நாளையை எண்ணி
வாழும் ஒவ்வொருவனும்
எத்தனை காயங்களுக்காய்
காத்திருக்கிறான்.
நாம் என்ன கட்டிக்கொண்டா
போகப்போகிறோம்
என்று சொல்பவனும்
இதிலிருந்து
விலக்கப்பட்டவனல்ல.
சொல்லாததை
சொல்வதற்காக மட்டும்
எமக்கிருக்கும்
பித்தலாட்டத்தனத்துடன்
காலம் கடத்துகிறோம்.
நாளிகைகளின்
உண்மைகளை உணராமல்
எம்மால் எதனைத்தான்
நடத்தி முடிக்க முடியும்.
சிந்திக்கலாமா??????…………..??????
20.04.2009
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் April 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: அமெரிக்கா, கடற் கொள்ளையர்கள்., கடற்படைகள், கப்பல்கள், கொள்ளையர்கள், சோமாலியா, பிரான்ஸ், மாலுமிகள்
add a comment
சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த அமெரிக்க உணவுக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கொள்ளையர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என கடந்த 9ஆம்திகதி அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, இக் கப்பலின் கப்டன் கடற்கொள்ளையர்களால் இன்னமும் பணயக் கைதியாக வைக்கப்பட்டுள்ளா ரென்றும் தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய அமெரிக்கக்கப்பலை 20 மாலுமிகளுடன் கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருந்தனர். (more…)
பாக். போராளிகளின் கோரிக்ககைகள் நிறைவேறுகின்றன. April 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: அரசாங்கம்., இஸ்லாமிய சட்டங்கள், சரியா சட்டம்., தலிபான்கள், பாகிஸ்தான், யுத்த நிறுத்தம்.
add a comment
பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்பட்ட தாக்குதல்கள் குழப்பங்களுக்குப்பிறகு பெப்ரவரி கடைசியில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் பயனாக வடமேல் மாகாணத்தில் ஒரு வித்தியாசமான சூழல் உருவாகியிருக்கிறது. பாக். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வேறு வழியில்லை என்ற நிலையில் அமெரிக்காவினது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள ஸ்வாட் பகுதியில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான சட்டத்தில் பாகிஸ்தானின் ஜனாதிபதி சர்தாரி கையெழுத்திட்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஸ்வாட் பகுதியில் தலிபான் போராளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. தலிபான் அமைப்புக்காக டெக்ரிக் நிபாஸ் ஷரியா முகம்மதி என்ற அமைப்புக்கும், வடமேற்கு எல்லைப்புற மாநில அரசுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி முதலாவது நடைமுறையாக ஸ்வாட் பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப் பட்டிருந்தது. இதற்கான அனுமதியை வழங்குவதில் அரசாங்கம் தாமதித்து வந்த நிலையில் அதற்கு பாகிஸ் தான் அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. (more…)
உலக அமைதிக்கான ஒபாமாவின் முஸ்லிம் நாடுகளுக்கான விஜயம். April 19, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: அணுஆயுத ஒப்பந்தம், அமரிக்கா, அமைதி, ஈராக், சமாதானம்., பராக் ஒபாமா, முஸ்லிம் நாடுகள்
add a comment
வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கிற்கு நேற்று முன்தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது 2011 ஆம் ஆண்டுக்குள் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் என அறிவித்தலை விபத்தில் விடுத்தார்.
பாதுகாப்புக் காரணங்களால் முன் அறிவித்தல்கள் எதுவும் இல்லாமல் தலைநகர் பக்தாத் சென்ற பராக் ஒபா மாவை அமெரிக்கப் படைத்தளபதிகள் வரவேற்றனர். இந்த விஜயத்தின் போது ஈராக்கின் அரசியல் தலைவர்களையும் இராணுவத் தளபதிகளையும் அமெரிக்க ஜனாதிபதி சந்தித்தார். ஈராக் கியர்கள் தங்களது பாதுகாப்பைத் தாங் களே பொறுப்பேற்கும் காலம் நெருங்கி விட்டதாக ஒபாமா கூறினார். 
சுமார் ஒரு இலட்சத்து 40ஆயிரம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தற்போது நிலைகொண்டுள்ளனர். ஈராக்கிலுள்ள பிரிட்டிஷ் படைகள் படிப்படியாக வெளியேறி வருகின்றன. கடந்த வாரத்தில் பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி யதாக கூறப்படுகிறது. (more…)
இத்தாலியியின் லாகிலா நகரை அழித்த பூகம்பம் April 19, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: இத்தாலி, பூகம்பம், லாகிலா நகரம்.
add a comment
இத்தாலியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 272ஐ எட்டியிருக்கிறது. இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன. மூன்று தசாப்தங்களின் பின்னர் இத்தாலியில் ஏற்பட்ட மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது. அழிந்து போன பிராந்தியத்தைக் கட்டி எழுப்புவதற்கு 30 வருடத்திட்டம் ஒன்றை அரசு அறிவித்திருக்கிறது. 
அப்ரஸோ பிராந்தியத்தை உலுக்கிய இப் பூகம்பத்தால் 70 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட அதன் தலைநகரமான லாகிலாவே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. (more…)
ஆஜென்ரீனாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் அல்போன்சின் மரணம். April 4, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: 1816 யூலை 9, 1982ஆம்ஆண்டு, ஆஜென்ரீனா, இராணுவ ஆட்சி, குடியரசு ஆட்சி, ஜனாதிபதி, ஜனாதிபதி ரவுல் அல்போன்சின், தென் அமெரிக்கா, நெஸ்டர் கா.கிர்க்னர், பியூனஸ் அயர்ஸ், ஸ்பானிய மொழி
add a comment
ஆஜென்ரீனாவின் முதன் முதலில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும் நாட்டை இராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயக மீட்புக்குக் கொண்டுவந்தவருமாகிய முன்னாள் ஜனாதிபதி ரவுல் அல்போன்சின் புற்றுநோய் காரணமாக தனது 82ஆவது வயதில் மரணமானதாக அவரது வைத்தியர் அறிவித்தார். இவர் நீண்டகாலமாக புற்றுநோய்க்கு ஆட்பட்டிருந்ததாக அவருடைய வைத்தியர் அல் பெர்ரோ சட்லர் தெரிவித்திருக்கிறார். 
ஆஜென்ரீனாவில் அடிப்படையான குடியரசு ஆட்சியை மலரச் செய்தவர் ராவுல் 1982ஆம்ஆண்டு ஏப்ரலில் முடிவுக்கு வந்த இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து 1983ஆம்ஆண்டு ஒக்டோபரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
1976ஆம் ஆண்டு முதல் 1983ஆம்ஆண்டுவரை நடைபெற்ற பார்ல்க்லண்ட் எனப்படுகிற சண்டை காரணமாக 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டதுடன் 8960 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் போயினர்.
இராணுவ ஆட்சியிலிருந்து ஆர்ஜென்ரீனாவின் அரசியல் நிலைமையை படிப்படியாக அரசியல் பலமுடன் மாற்றியமைத்தார். மக்களை அரசியல் பலமுள்ளவர்களாக்கி குடியரசு ஆட்சியை நாட்டில் கொண்டு வருதல் என்ற தனது நோக்கத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக இராணுவத்தினுடைய பலத்தை இல்லாமல் செய்து அமைதியான நாடாக மாற்றியவர்.
தனது நடவடிக்கைகள் மூலமாக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையிலும் ஆர்ஜென்ரீனாவை கட்டி எழுப்பிய ஒரு தலைவரது மறைவிற்கு அந் நாட்டு மக்கள் அஞசலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
அதன் பிறகு ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஏனைய குற்றச் சாட்டுகளில் இராணுவ தலைமையர்கள் பலர் ஜனாதிபதி அல்போன்சினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 1989ஆம்ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தோல்வியடைந்தார் ஆனாலும் யூனியன் சிவிக்கா ரடிக்கல் என்ற கட்சியின் தலைவராகவே இருந்தார். 1993ஆம் ஆண்டு சேனற்றராகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் நிலை காரணமாகக் கூட அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவில்லை என்பதே முக்கியமானது. அந்தவகையில் ஆர்ஜென்ரீனா அரசியலில் செல் வாக்கு செலுத்தி வந்து குறிப்பிடத் தக்கவர் மரணமடைந்துள்ளார் எனக் கொள்ளலாம்.
இப்போது அஜென்ரீனா குடியரசின் ஜனாதிபதியாக நெஸ்டர் கா.கிர்க்னர் உள்ளார். ஸ்பெயினிடமிருந்து 1810 மே 25 இல் நடைபெற்ற மே புரட்சியின் மூலம் விடுதலை பெற்றது. 1816 யூலை 9 இல் குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு நாடாகும்.
ஆஜென்ரீனா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். பியூனஸ் அயர்ஸ் இதன் தலைநகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். ஸ்பானிய மொழி அரச அலுவல்கள் மொழி ஆகும்.
தலிபான்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் அண்மையத் தாக்குதல்கள் April 3, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: ஆப்கானிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை, தலிபான், தாக்குதல்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதி, பாகிஸ்தான், பொலிஸ் பயிற்சிக் கல்லூரி, முல்லா முகமது ஓமர, லாகூர், ஹமீட் கார்சாய்
add a comment

அண்மைய நாட்களில் உலகளவில் மிகவும் பரபரப்பான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் மோசமான தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் நடத்தப்படும் நாடுகள் வரிசையில் அது முதலிடத்தில் இருப்பதேயாகும். பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தலிபான்கள் உரிமை கோரியிருக்கிறார்கள்.
பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து தலிபான்களின் பெயரை நீக்க வேண்டுமென ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களால் பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அதனை தேவையற்றதாக்கியிருக்கிறது.
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 142 பேர் களின் பெயர்கள் ஐ.நா.வின் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளன. இந்நிலையில், தலிபான் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் தீர்மானித்திருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கருகில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் மீது மார்ச் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 22 பேர் பலியானதுடன், 90 பேர் வரை காயமடைந்தனர்.
பயிற்சிக்கல்லூரியினுள் பொலிஸாரின் சீருடையில் நுழைந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமான முறையில் துப்பாக்கிப் பிரயோகங்களையும் கைக்குண்டு வீச்சுகளையும் மேற்கொண்டுள்ளனர். சுமார் 14 பேர் இத் தாக்குதலில்ஈடுபட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
மனாவன் பொலிஸ் பயிற்சி கல்லூரி என அழைக்கப்படும் இப் பயிற்சி நிலையம் நகரின் எல்லைப்பகுதிக்கு வெளிப்புறத்தில் இந்திய எல்லைப்பகுதிக்கான வீதியில் உள்ளது.
பொலிஸுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 850 பயிற்சியாளர்கள் இந்த நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்துள்ளனர். காலையில் தமது வழமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்த போது ஆயுததாரிகள் நிலைய த்தின் நான்கு பக்கங்களிலிருந்தும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
8 மணிநேரம் வரை தொடர்ந்த இந்தத் தாக்குதல் பின்னர் விசேட துருப்புக்கள் வர வழைக்கப்பட்டு தாக்குதலின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி செய்திகள் பயிற்சி நிலையத்தினுள் பல அதிகாரிகள் நினைவிழந்து வீழ்ந்து கிடப்பதை ஒளிபரப்பின.
எத்தனை தாக்குதலாளிகள் வந்தார்கள் என்பதோ எத்தனை பேர் பலியானார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் அருகிலுள்ள கட்டிடங்களில் மறைந்திருக்கிறார்கள் என்பதோ இதுவரை எமக்குத் தெரியாது. நாம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோமென சம்பவ இடத்திலிருந்த அதிகாரியொருவர் சண்டை நடைபெறும் போது அறிவித்தல் கொடுத்திருக்கிறார்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அதே விதமான பாணியில் மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட தாக்குதலை தலிபான்கள் தாமே மேற்கொண்டதாக அறிவித்திருக்கின்றனர்.
இத்தாக்குதலைத் தமது குழுவினரே மேற்கொண்டதாக பாகிஸ்தானிலுள்ள தலிபான்களின் தலைவர் பைதுல்லாஹ் மசூத் சர்வதேச ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் முகமாகவே இத் தாக்குதலை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் லாகூர் தாக்குதலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மார்ச் 21 ஆம்திகதி புலனாய்வு அமைப்பின் அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவையும் தமது அமைப்பினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் இவ்வாறான தாக்குதல்களும் நீண்டகாலத்திற்கு தொடருமென எச்சரித்துள்ள மசூத் மார்ச் 27 ஆம் திகதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ள னர்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் லாகூர் தாக்குதல் தலிபான்களின் மசூத்துக்கு விசுவாசமான போராளிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென தெரிவித்திருந்த கருத்துக்கு ஏற்றால்போல் மசூத் தகவல் வெளியிட்டிருக்கிறார். லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது மூன்று ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் 15 நாட்களுக்கு முன்பு ஆப்கானிலிருந்து லாகூருக்கு வந்தவரென உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அல்கொய்தாவுடன் தொடர்பு இல்லாது ஒரு குறிப்பிட்ட தலிபான் போராளிகள் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபரிடம் தெரிவித்திருக்கின்ற நிலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் ஆப்கானிலுள்ள தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதுடன் இரு நாட்டு எல்லைகளினூடாக பரஸ்பரம் போராளிகளை பரிமாறப்படுகின்றனர்.
எது எப்படியிருந்தாலும் பாகிஸ்
தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்நாட்டின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மீதான கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்திருந்த ஒபாமா, இரு நாடுகளினதும் எல்லைப்பகுதியில் அபாயகரமான சூழ்நிலை உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தீவிரவாதிகளை தோற்கடிப்பதுடன் பாகிஸ்தானுக்கு உதவுவதுமே தமது தாக்குதல் நோக்கத்துக்குக் காரணம் என அமெரிக்கா தெரிவித்திருக்கின்ற நியையில் பாகிஸ்
தானில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தலிபான்களுக்கு இன்னமும் நெருக்குதல்களையே தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.
அல் கொய்தாவுக்கெதிரான நடவடிக்கையை பாகிஸ்தானுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டிய தேவையை உணர்ந்து அதில் உறுதியாக உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைகளில் மோசமான விளைவுகளைச் சந்திக்க தலிபான்கள் தயாராவதாகவே அண்மைய தாக்குதல்களைக் கொள்ள முடிகிறது.

















