சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவிப்பு July 9, 2009
Posted by Athiran in செய்திகள்.trackback
இலங்கையில் செயற்பட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை அவற்றின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு ஏற்ப கிழக்கிலுள்ள தனது முக்கியமான நான்கு கிளைகளை மூடி வீடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கிழக்கில் மாத்திரம் 150 வரையான பணியாளர்கள் செங்சிலுவைச் சங்கத்திற்குப் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் யுத்தம் நடைபெறும் காலத்திலேயே தேவைப்பட்டதாகவும் அதற்கான தேவை யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தேவையற்றதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தலை இலங்கையின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமர சிங்க விடுத்திருக்கிறார். அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களில் செஞ்சிலுவைச் சங்கம் முதன்மைனயானது. இதே நேரம் இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்களுக்கான பெரும் தேவை இருப்பதாகவும், அந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய தேவைகள் குறத்து தாம் செயற்படப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தி வருவதாக ஜெனிவா தலைமையகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதே Nநுரம் அரசாங்கங்களுடன் இணைந்து செய்ற்ட:டு வரும் அமைப்பான நாங்கள் இலங்கையை விட்டுப் போகப் போவதில்லை தேவையாக உள்ள அனைத்து விடயங்களுக்காகவும் நாங்கள் செயற்பட விருக்கிNறூம் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தபணியாளர் குறைப்பு நடவடிக்கைகளின் பின்னர் எத்தனை பேர் இலங்ககையில் இருப்பார்கள் போன்ற கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


















Comments»
No comments yet — be the first.