ஈராக்கின் புதிய அணு உலைகளை குறி வைக்கும் மேற்குலகம் December 5, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஈரான் புதிய அறிவிப்பொன்றினை அண்மையில் விடுத்திருந்தமை அணு ஆயுதச் செயற்பாடுகள் குறித்த அச்சத்தில் உள்ள நாடுகள் எல்லாவற்றையுமே அதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கின்றன. ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கடும் எச்சரிக்கை விடுப்பதையும் மீறி ஈரான் அணுச் செறிவாக்கத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறது.
சர்வதேசத்தின் கோரிக்கைகளை ஈரான் மீறக்கூடாதென என்பது மேற்குலக நாடுகளின் எச்சரிக்கையாகும். பத்து புதிய யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளை அமைக்கப் போவதாக ஈரான் அறிவித்திருக்கிறது.
ஈரானின் இரகசிய அணு நிகழ்ச்சித் திட்டத்தை கண்டித்து ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புப் பிரிவு தீர்மானமொன்றை நிறைவேற்றிய சில நாட்களில் புதிய யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஈரானிய அரசாங்கம் அறிவித்தது. (more…)
ஆப்கான் போரை ஒபாமா ஏன் முடித்து வைக்க எண்ணுகிறார் December 4, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்தில் வெற்றிபெறாமல் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என கடந்த ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதற்கமைவாக அங்குள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவியாக மேலும் ஒரு பெரிய தொகுதி படையினரை அனுப்புவதற்கு பராக் ஒபாமா முடிவு எடுத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தமது நிலைப்பாடு குறித்த கொள்கையில் அமெரிக்கா பிடியாக இருக்கிறது என்பதற்கு அண்மைய நாட்களே உதாரணமாகும். நடைபெற்ற தேர்தலில் தனக்குப் பிடித்தால் போல் கர்சாயை பதவியில் அமர் த்தியமை நல்ல தொரு உதாரணமாகும்.
(more…)
கடற்கொள்யைர்கள் போராளிகளிடம் சிக்கியுள்ள சோமாலியா December 4, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
கடற்கொள்ளையர்களாலேயே அண்மைக்காலங்களில் பிரபலமான நாடாக இருக்கின்ற சோமாலியாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்து வீண்களியாட்டங்கள், திரைப்படப் பாடல்களுக்கு அல் ஷெபாப் அமைப்பினர் தடைவிதித்திருக்கின்றனர்.
புனித குர் ஆனின் வாசகம் அடங்கிய தொலைபேசிகளையும் மார்க்க அனுஷ்டானங்களையுமே நாட்டில் அனுமதிக்க முடியும் என அல்ஷெபாப் அமைப்பினர் அறிவித்துள்ளனர். தலைநகர் மொகாடிசுவின் தென் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல் ஷெபாப் அமைப்பு சோமாலியாவில் இஸ்லாமிய ஷரிஆ ஆட்சியை ஏற்படுத்துவதற்காகப் போராடி வருகின்றது.
இரு வாரங்களுக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியில் சினிமாப் பாடல்களைச் சேமித்து வைத்து அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு பொது மக்கள் மத்தியில் கசையடி கொடுக்கப்பட்டதுடன் அவரது கையடக்கத் தொலைபேசியில் இருந்த பொலிவூட் திரைப்படங்களும் பாடல்களும் அழிக்கப்பட்டபின் தொலைபேசி கையளிக்கப்பட்டது. (more…)
பிலிப்பைன்ஸ் அரசியல் படுகொலையும் மனித உரிமைகளும் December 3, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
பிலிப்பைன்ஸ் மனித உரிமைக் குற்றங்கள் நிறைந்த நாடு என்ற குற்றச்சாட்டுக்கு நிரூபணமாக இந்தவாரத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சொல்ல முடியும். அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.
இக் கொலைகளைப் புரிந்த குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது, நிச்சயம் கொலையாளிகள் தண்டிக்கப்படுவர் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கலோரியா அரோயா சூளுரைத்திருக்கிறார். (more…)
நீதிமன்றம் தீர்மானிக்கப் போகும் ஷிலேயாவின் ஜனாதிபதிப் பதவி November 21, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஹொண்டுராஸ் நாட்டின் நாடுகடத்தப்பட்ட மானுவெல் ஷிலேயா செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் நாட்டுக்குள் வந்தவு டன் அங்குள்ள பிரேஸில் தூதரகத்தினுள் தஞ்சம் புகுந்தார். எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர்வேன் என்று உறுதியாக இருக்கின்ற ஷிலோயா விடாமுயற்சியுடன் இருக்கிறார்.
இந்நிலையில் ஹொண்டுராஸில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்பே பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மனுவல் ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டு காங்கிரஸ் இந்தவாரத்தில் தெரிவித்தது.
இம்மாதம் 29 ஆம் திகதி இங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பின்னர் டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலேயே ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து தீர்மானிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ஜோஸ் சாவேட்ரா கூறியிருக்கிறார்.
இதே வேளை தேர்தலுக்குப் பின்னர் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்பார். அதுவரை ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவதா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் அடுத்தவாரம் வழங்கவுள்ள தீர்ப்பே தீர்மானிக்கும் என்றும் தெரிகிறது. (more…)
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல் November 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும். (more…)
அப்பாஸின் அரசியல் ஒதுங்கல் மேற்குலகில் சலனத்தை ஏற்படுத்துகின்றது November 17, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மத்திய கிழக்கு இருதரப்புப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் வித்தியாசமானதும் புதியதுமான அணுகு முறையை ஒபாமா நிருவாகம் கையாளவேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வெளிவிவகாரக் கொள்கையில் உள்ள சிக்கல்களை கடந்த 10 மாத ஆட்சியில் இஸ்ரேலிய பலஸ்தீன விவகாரத்திற்கு முடிவு அல்லது சமாதானத்தை எற்படுத்த முடியாததை ஒபாமா தலைமையிலான ஆட்சி காட்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் கிலாரி கிளின்ரன் மத்திய கிழக்குக்கு விஜயம் செய்திருந்த வேளை பலஸ்தீன ஜனாதிபதி கிளின்ரனின் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் இஸ்ரேல் தமது குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத வரையில் பேச்சுக்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தார். (more…)
மேற்குலகின் சோசடியை நிரூபித்திருக்கும் ஆப்கானிஸ்தான் November 16, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் மீள் வாக்களிப்பு நாளை நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய்க்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இரண்டாம் கட்ட வாக்களிப்பு ரத்து செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக ஹமீத் அல்கர்ஸாய் மீண்டும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
அதன்படி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஹமீத் அல் கர்ஸாய் பதவியேற்று இருக்கிறார். தனது பதவியை மீண்டும் பொறுப்பேற்ற ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய் இன ஐக்கியம் மிக்க தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காக உறுதியாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மற்றும் மேற்குலக நாடுகளின் தலைவர்களும் ஹமீத் அல் கர்ஸாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். (more…)
பலஸ்தீனம் முன் நிபந்தனையைக் கைவிட வேண்டிய நேரம் November 16, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மரபு ரீதியான விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவே அனைவரும் விரும்புகின்றனர். இருப்பினும் அதற்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு உலக நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் உதாரணமானதாகும்.
இந்த வாரத்தில் மத்திய கிழக்கில் முக்கியத்துவமான நடவடிக்கைகள் நடைபெற்றன. அவற்றில் பலஸ்தீன விவகாரத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தவறு செய்பவன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை பாதிக்கப்பட்டவனே அமைதியாக இருக்க வேண்டும் என்பது போல் நடைபெற ஏற்பாடாகி வரும் பேச்சு வார்த்தைக்கு முன்நிபந்தனை விதிக்கக்கூடாது என பலஸ்தீனத்திற்கு ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார். (more…)
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம். October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
பாகிஸ்தானில் தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள் October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 இராணுவ வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே அமைந்துள்ள ராவல்பிண்டி நகரத்தில் அந்த நாட்டின் இராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. (more…)
அமெரிக்காவின் கைக்குவரும் அணுஆயுத விவகாரம். October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.
ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு அமெரிக் காவே காரணம். வடகொரியாவின் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா.நீண்ட தூர ஏவுகணைப்பரிசோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டமை காரணமாக ஏற்பட்ட சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகளால் இந்த வருட முற்பகுதியில் ஆறு நாடுகள் பங்கு கொள்ளும் அணுத்திட்டப்பேச்சுக்களிலிருந்து வட கொரியா விலகியிருந்தது. (more…)

















