<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>பேசும் தாரகை</title>
	<atom:link href="http://tharakai.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tharakai.wordpress.com</link>
	<description>வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்</description>
	<lastBuildDate>Thu, 29 Oct 2009 06:17:48 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='tharakai.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/95b7168d32ae87efc36f21c542f2b883?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>பேசும் தாரகை</title>
		<link>http://tharakai.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்.</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86/#comments</comments>
		<pubDate>Thu, 29 Oct 2009 06:17:48 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=963</guid>
		<description><![CDATA[மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=963&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.</p>
<p>ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.<span id="more-963"></span><br />
நடைபெற்ற தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த கர்சாய் மீள் வாக்களிப்புக்கு ஒப்புக்கொள்ள மறுத்திருந்த நிலையில் மேற்குலகத்தின் திரைமறைவு பேச்சுக்களையடுத்து அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.</p>
<p>ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்திற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையானால் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும். உண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்சாய் 47 சத வீதமான வாக்குகளையே பெற்றிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடாகி வருகிறது.</p>
<p>மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு கர்சாய் தலையசைத்ததையடுத்து ஐக்கிய நாடுகள் சபை வாழ்த்துத் தெரிவித்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்த ஏற்பாடாகி வருகின்ற நிலையில் கர்சாய் மற்றும் அப்துல்லா ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி ஹமீட் கர்சாய் அதிக வாக்குகள் பெற்றார். எனினும், அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையானது பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானதாகவே இருந்தது என்று ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம்திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கர்சாயும் அப்துல்லாவும் போட்டி<br />
யிடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் அடுத்த ஜனாதிபதியாவார்.</p>
<p>ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி ஹமீட் அல் கர்சாயியும் மற்றொரு முன்னணி வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் தாமே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தமையினால் பெரும் சிக்கல் தோன்றியது.  இவ்வாறான அறிவித்தல்களினால் இரு தரப்பினருடைய ஆதரவாளர்களிடையே வன்முறைகள் பெருகும் அபாயம் தோன்றியதுடன் பெரும் பிரச்சினைகளும் உருவாகியிருந்தன.</p>
<p>ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி, மாகாண சபை தேர்தல்களில் வன்முறைகள் நடைபெற்றதாகவும் மோசடிகள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதே வேளை வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்தில் அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இதற்கேற்றாற்போல் அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.</p>
<p>தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் என்ற வகையில் இத் தேர்தல் தலிபானியர்களின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இருந்த தலிபான்களின் சிக்கல்களுடன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போதும் பெரும் வன்முறைகள் எழ வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது.</p>
<p>நடைபெற்ற தேர்தலில் வரப் போகும் வெற்றி யாரைத் திருப்திப்படுத்துமோ இல்லையோ மேற்குலகைத் திருப்திப்படுத்துவதாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கர்சாயியின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மேற்குலகம் மறுத்த அல்லது விரும்பாமையால் நவம்பரில் தேர்தல் நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.</p>
<p>ஆப்கானிஸ்தானில் நடைபெற்று முடிந்த தேர்தல் தலிபான்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடைபெற்ற வன்முறைகள் அதிகம் என்றே கணக்கிடப்பட்டுள்ளது. தலிபான்களின் மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையே தலிபான்களின் மூச்சாக இருந்து வருகிறது.</p>
<p>மேற்குலக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவர் தெரிவு செய்யப்படுவதனையே மேற்குலகம் விரும்புவதாகவும் பார்க்கப்பட்ட நிலையில் மீள் தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டமை சந்தேகங்கள் பலவற்றை தோற்றுவித்துள்ளது.</p>
<p>ஆப்கானில் பொருளாதாரத்தை மேம்படுத்தி தொழில்களை ஏற்படுத்துவதுடன் இளைஞர்களை மேம்படுத்துவதுமே முக் கியமான பணியாக உள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லா இவ்வாறானதொரு நல்ல நிலைமையைத் தோற்றுவிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.</p>
<p>ஆப்கான் ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில் அங்குள்ள வெளிநாட்டுப் படைகளின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கிறது.<br />
ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் சண்டைகள், தாக்குதல்களால் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்து வருகின்றமை நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கேள்விக் குறியையே கொண்டிருக்கிறது. இந் நிலையில் மீண்டும் கர்சாய் பதவிக்கு வருவது விமர்சனங்களை அதிகமாக்கும்.</p>
<p>ஆப்கானின் தென்பகுதியிலுள்ள சில மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களை தலிபான்களே ஆட்சி செய்கின்றனர். ஆப்கான் நாட்டின் 365 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியைச் செய்கிற, அழிந்து போயிருக்கிறவற்றை மீளவும் கட்டி எழுப்புகிற, கல்வியில் மேம்பாட்டை ஏற்படுத்துகிற, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற, சிறுவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்ற உறுதியான ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென ஆப்கான் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.</p>
<p>தலிபான்களின் பிரச்சினைகளே ஆப்கானில் பெரியது என்ற வகையில் அதற்கான தீர்வை முதலில் கொண்டு வருவதே அடுத்த ஜனாதிபதியின் கடமையாக இருக்கும் என்ற வகையில் புதியவர் ஒருவர் ஜனாதிபதியõக பதவிக்கு வருவதே சிறந்ததொரு தெரிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.<br />
நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ள அடுத்த ஜனாதிபதி செய்து முடிக்கவுள்ள பணிகள் ஆப்கானில் அமைதியைக் கொண்டு வருமா என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே தீர்மானிக்கும்.</p>
<p>இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது சம்பந்தமாக அமெரிக்கர்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏ.பி.சி. செய்திச் சேவை நடத்திய கருத்துக் கணிப்பீட்டில். இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 47 சதவீதமானோர் படைகள் அனுப்பப்படுவதை ஆதரிக்கின்ற அதேவேளை 49 சதவீத மானோர் எதிர்க்கின்றனர்.</p>
<p>ஆப்கானிஸ்தான் யுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திடமுள்ள திட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ளன என்பதற்கு ஏற்றாற் போல் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், புஷ் நிருவாகம் ஆப்கான் விடயத்தை சரியாகக் கையாளவில்லை எனத் தெரிவித்ததன் மூலம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.</p>
<p>ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் படைகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த இருக்கிறது.<br />
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான போர்களில், ஈராக்கில் பெருமளவுக்கு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றே அமெரிக்கா சார்க் நாடுகள் நம்புகின்றன.</p>
<p>ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகள் தேவைப்படுவதாக அங்குள்ள நேட்டோ தளபதிகள் அறிவித்துள்ள நிலையில், தாம் விட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா மேலதிக படைகளை அங்கு அனுப்புவதற்கு முயற்சித்து வருகிறது. ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சாக்காகச் சொல்லி வருகிறது.</p>
<p>ஆப்கானிஸ்தானில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் அமெரிக்க படையினராகும். இராணுவ பலத்தை 4 இலட்சமாக உயர்த்த அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒபாமா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராணுவத்துக்கு உதவுவதற்காக மேலதிகமாக 17 ஆயிரம் படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.</p>
<p>இப்போதுள்ள படைகளுக்குரிய ஆப்கானிஸ்தான் அரசுக்கான செலவு 5500 கோடியாகும். இதில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகிறது. படைகளை இரட்டிப்பாக்கினால், செலவும் இருமடங்காகும். பாதுகாப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள அமெரிக்காவை உடனடியாக முடிவு எடுக்க விடாமல் செலவுகளே கட்டுப்படுத்துகின்றன. இதற்கிடையில் இங்கிலாந்து அரசும் தன்பங்குக்கு இராணுவ வீரர்கள் பலத்தை அதிகரிக்க இருக்கிறது.</p>
<p>ஆப்கானிஸ்தானில் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக நடந்த தேர்தலில் ஏற்படும் மாற்றங்கள் அமெரிக்கச் சார்பு அரசாங்கத்தை மீண்டும் ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்து விடுமோ என்ற பயம் அரபு நாடுகள் மத்தியிலும் ஆப்கான் மக்கள் மத்தியிலும் இருந்தது.<br />
தலிபான்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கும் அமெரிக்க அதிபர் அங்கு உறுதியான அரசாங்கம் அமையும் வரை படைகளை மேலதிகமாக அனுப்புவதில்லை என முடிவு செய்திருக்கிறார்.</p>
<p>தலிபான்கள் பலமடைந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கைப்பற்ற முன்னர் தலிபான்களை ஒழித்துக் கட்ட மேலதிக படைகள் அனுப்பப்பட வேண்டுமெனவும் கருதப்படுகிறது. எது எவ்வாறானாலும் ஆப்கானிஸ்தானில் நவம்பர் 07ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்களிப்பு முடிவு வெளிவந்து, அடுத்த ஜனாதிபதி பதவியேற்கும் வரை அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.<br />
யுத்தத் திருப்புமுனைகளுடனான வரலாற்றைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள், மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஏற்பட்ட குழப்பங்கள் மீள் வாக்களிப்பு நிலையை உருவாக்கியிருக்கிறது. எப்படியானாலும் இந்த வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானின் அடுத்த தலைவரது பெயர் கண்டு பிடிக்கப்பட்டு விடும் என்று நம்புவோம்.</p>
<p>தமக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தையே விரும்பும் மேற்குலகுக்கு, நடக்கவுள்ள தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும் ஜனநாயகத்தை நிரூபிப்பதற்கு மீண்டும் தமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பை ஆப்கான் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.<br />
22.10.09</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/963/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/963/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/963/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/963/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/963/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/963/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/963/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/963/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/963/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/963/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=963&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள்</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Thu, 29 Oct 2009 03:09:54 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=961</guid>
		<description><![CDATA[தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=961&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.<br />
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.</p>
<p>பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 இராணுவ வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே அமைந்துள்ள ராவல்பிண்டி நகரத்தில் அந்த நாட்டின் இராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.<span id="more-961"></span></p>
<p>பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி கயானி அலுவலக இல்லம், உளவுப் பிரிவான ஐ. எஸ். ஐ. தலைமை அலுவலகம் ஆகியவை உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்தனர்.</p>
<p>அதைத் தொடர்ந்து கறுப்பு சீருடை அணிந்த கெமாண்டோ படை வீரர்கள் களத் தில் இறங்கினர். இரா ணுவ வீரர்களும்  அவர் களுடன் சேர்ந்து கொண்டு தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் தீவிரவாதிகள் நுழை ந்த தகவல் கிடைத்த தும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.</p>
<p>லாகூர் நகரில் நேற்று நடைபெற்ற தாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள் யாவும் வஸிரிஸ்தானில் இராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள படையினரின் கவனத்தை திசை திருப்ப இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது.</p>
<p>பாகிஸ்தானில் மௌலானா பசுலுல்லா தலைமையில் இயங்கும் தலிபான்கள் வஸிரிஸ்தானில் கடுமையான இராணுவ நெருக்குதல்களை எதிர் கொண்டுள்ளதால் படையினரைத் திசை திருப்ப இவ்வாறான தாக்குதல்களில் தலிபான்கள் ஈடுபடுகின்றனர் என்று கருதப்படுகிறது.<br />
பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாகாணத்தின் தென் பகுதியில் விமானப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் 16 தலிபான்கள் பலியாகினர். ராவல்பிண்டியிலுள்ள பாகிஸ்தான் இராணுவத் தலைமையகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பின்னர் பாகிஸ்தான் வான் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.</p>
<p>ஆப்கானிஸ்தானுக்கருகாமையிலுள்ள வஸிரிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தின. மகீன், லடா என்ற பிரதேசங்களிலிருந்த தலிபான்களின் மறை விடங்கள் தாக்கியழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.</p>
<p>இவ்வாறான கடுமையான தாக்குதல்களை பாகிஸ்தான் தலிபான்கள் மீது இதுவரை மேற் கொள்ளவில்லை என்று சொல்லுமளவிற்கு தலிபான்களுக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையிலும் தலிபான்களின் தாக்குதல்கள் பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பாக். இராணுவ தலைமையகத் தாக்குதல் ஏராளமான அதி நவீன ஆயுதங்களுடன் வந்த தலிபான்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க இராணுவ ஹெலிக்கொப் டர்களும் வரவழைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.</p>
<p>இந்தத் தாக்குதலில் முன்னுக்குப்பின் முரண்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் தாக்குதலில் படைத்தரப்பிற்குப் பாரிய சேதம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான் என அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.</p>
<p>ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஸ்வான் பள்ளத்தாக்கில் அமெரிக்க படையுடன் இணைந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிரடி தாக்கு தல் நடத்தியதில் தலிபான் தலைமை தள பதி பைதுல்லா மசூத் கொல்லப்பட்டிருந் தார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள ஐ.நா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் தலிபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.</p>
<p>தலிபான்கள் பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். அதே போல் இந்த வாரத்திலும் பெரியளவான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெஷாவர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர். நடைபெற்று வருகின்ற தொடர் தாக்குதல்கள் பெரும் இழப்புகளையே தோற்றுவித்து வருகின்றன.</p>
<p>பாக். அரசாங்கம் நாட்டினுள் நடக்கும் தாக்குதல்களை நிறுத்திவிடுவதன் மூலமே அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற கட்டாயத்திற்கு வந்திருக்கிறது என்றே இப்போதைய நிலையில் சொல்ல வேண்டும். நடைபெறும் தலிபான்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள் அங்கு அமைதியைக் கொண்டுவரப் போவதில்லை என்பது மட்டுமே உறுதியானது.<br />
15.10.09</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/961/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/961/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/961/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/961/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/961/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/961/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/961/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/961/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/961/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/961/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=961&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அமெரிக்காவின் கைக்குவரும் அணுஆயுத விவகாரம்.</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 13:06:44 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=956</guid>
		<description><![CDATA[அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.
ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=956&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.</p>
<p>ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு அமெரிக் காவே காரணம். வடகொரியாவின் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா.நீண்ட தூர ஏவுகணைப்பரிசோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டமை காரணமாக ஏற்பட்ட சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகளால் இந்த வருட முற்பகுதியில் ஆறு நாடுகள் பங்கு கொள்ளும் அணுத்திட்டப்பேச்சுக்களிலிருந்து வட கொரியா விலகியிருந்தது.<span id="more-956"></span></p>
<p>வடகொரியா ஜோங் போங் அணு ஆலைக் கட்டுமானப்பணிகளைப் பூர்த்தி செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அத்துடன் 100 இடங்களில் அணுச் செறிவாக்கல் தொடர்பான வேலைகளை செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.</p>
<p>தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழ்நிலை தென்கொரியாவில் பதற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது. வடகொரியா தமது நாடு மீது தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் வடகொரியாவின் அணு ஆயுத நிலைகள் மீது தாம் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தென்கொரியா தெரிவித்திருக்கிறது.</p>
<p>இதற்கிடையில் அண்மையில் வெளியான தகவல் ஒன்றின் படி வடகொரியாவிடம் உயிரியல் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தும் 13 வகையான வைரஸ் மற்றும் கிருமிகள் இருப்பதுடன் சுமார் ஐந்து ஆயிரம் தொன் இரசாயன ஆயுதங்களையும் அந்நாடு வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.<br />
வடகொரியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை இல்லாமல் செய்யும் வேலைகளில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்படும் அணு ஆயுதச் செறிவாக்க நடவடிக்கைகள் மேலும் பிரச்சினையைச் சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>உலகளவில் பலம் மிக்க நாடுகளுக்கு அணு ஆயுதச் செயற்பாடுகளிலேயே விருப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் அணு ஆயுதப் பலத்தை மேம்பட்ட நிலையில் கொண்டுள்ள அமெரிக்கா அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளில் உலகளவில் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே ரஷ்யாவின் ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பந்தம் ஒன்றினை மேற் கொண்டிருந்தார்.</p>
<p>வட கொரியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொண்ட அணுவாயுத விவகாரம் குறித்த பேச்சுகளை மீள ஆரம்பிப்பதானால் வடகொரியா அணு ஆயுத ஒழிப்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்திருக்கிற நிலையில் வட கொரியா அமெரிக்காவின் பக்கம் கையை நீட்டியிருக்கிறது.</p>
<p>சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு வடகொரியா இசைந்தாக வேண்டும் என அமெரிக்கா எண்ணுகிறது. இதனை வட கொரியா ஏற்பதற்குத் தயாரில்லை என்பதும் முக்கியமானதே. வடகொரியா குறித்த விவகாரத்தை கையாள்வதற்கு ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது.</p>
<p>கடந்த மே 25 இல் வடகொரியா நடத்திய அணுஆயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து பல தடைகளை விதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வடகொரியாவின் அணு ஆயுத செயற்பாடுகளில் உதவி செய்து வரும் சீனாவுடன் அமெரிக்கா, தந்திரோபாய மற்றும்பொருளாதõரப் பேச் சுகளை நடத்தியிருந்தது.</p>
<p>வடகொரியா, சீனா ஆகி யவற்றின் இராஜதந்திர உறவுக்கு 60 வருடங் களை நிறைவு செய்கிறது. அண்மையில் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனப்பிரதமர் வென் ஜியாவோ வடகொரியத் தலைவர் கிம் ஜோங் ஆகியோருக்கிடையில் நடைபெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் முடிவில் அமெரிக்காவுடன் முதலில் பேச்சு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வடகொரியா மீது தடைகளை அமுல்படுத்துவதற்குச் சீனா தவறிவருவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வாஷிங்டன் சென்றிருந்த சீனாவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அணுஆயுத விடயத்தில் வடகொரியா தனிப் போக்கில் செயற்படுவதனால் அதனைச் சமாளிப்பதற்கு அமெரிக்கா அதன் நேச நாடுகளைத் தம் வலைக்குள் விழுத்துவதற்கு முயன்று வருகிறது என்பதற்கு சீனாவுடனான செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும்.</p>
<p>ஆனாலும் வடகொரியாவிற்கு சர்வதேச பொருளாதாரத்தடைகள் நெருக்குதல்கள் காரணமõக தென்கொரியாவுடனான தமது உறவுகளை தொடர்வதற்கான வேலைகளை அண்மை நாட்களில் மேற்கொண்டிருந்தது. அதற்கு உதாரணமாக வடகொரியாவிலுள்ள தென்கொரிய வாசிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம்.</p>
<p>வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுதச் சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.<br />
பொருளாதாரத் தடைகளை மேலும் விஸ்தரிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு தென்கொரியாவும் ஆதரவளித்து வருகிறது. அத்துடன் தாம் வடகொரியாவுக்கு உதவுவதற்கும் தயார் என்று தென் கொரியா தெரிவித்துமிருக்கிறது.</p>
<p>வட கொரியா மேற்கொண்டுவரும் ஏவுகணை, ரொக்கெட், அணு ஆயுதத் தொழிற்பாடுகள் முன்னெடுக்கப்படாது நிறுத்தப்படுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செய்து கொண்டே இருக்கும் அது வரைக்கும் வடகொரியாவின் செயற்பாடுகளும் தொடரும் என்பதற்கு வடகொரியாவின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற விடயத்தைக் கூறலாம்.</p>
<p>வட கொரியாவின் அணு ஆயுத செயற்பாடுகளை நிறுத்தி பேச்சுக்கு வரும்படி வட கொரியாவிடம் அமெரிக்கா கோரிவருகிறது. அது குறித்து நாங்கள் பேச வேண்டும் என்று வடகொரியா சொல்கிறது. இவ்வாறான நிலையில் எப்போது அணு நிகழ்ச்சித்திட்டப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.<br />
08.10.09</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/956/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/956/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/956/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/956/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/956/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/956/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/956/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/956/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/956/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/956/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=956&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் ஐ.நா.அலுவலகம் மீதான் தாக்குதல் கூறும் செய்தி</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 13:05:06 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=954</guid>
		<description><![CDATA[தலிபான் போராளிகளின் பாகிஸ்தான் பிராந்திய முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் எறிகணைத் தாக்குதலில்  கொல்லப்பட்டமைக்கு   பழிதீர்க்கப்  போவதாக  புதிய தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுத் சவால்  விடுத்திருந்த நிலையில்  பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை  குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஐ.நா. அதிகாரி உட்பட 5பேர் பலியாகினர்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் பெய்துல்லா  மெஹ்சுத் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு புதிய  தலைவராக  ஹக்கிமுல்லா மெஹ்கத்  பொறுப்பேற்றிருந்தார்.  தலிபான்களுக்கெதிரான  நடவடிக்கைகளி&#62;ல் ஈடுபட்டு வரும் அமெரிக்காவையும்    [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=954&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தலிபான் போராளிகளின் பாகிஸ்தான் பிராந்திய முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் எறிகணைத் தாக்குதலில்  கொல்லப்பட்டமைக்கு   பழிதீர்க்கப்  போவதாக  புதிய தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுத் சவால்  விடுத்திருந்த நிலையில்  பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை  குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஐ.நா. அதிகாரி உட்பட 5பேர் பலியாகினர்.</p>
<p>ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் பெய்துல்லா  மெஹ்சுத் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு புதிய  தலைவராக  ஹக்கிமுல்லா மெஹ்கத்  பொறுப்பேற்றிருந்தார்.  தலிபான்களுக்கெதிரான  நடவடிக்கைகளி&gt;ல் ஈடுபட்டு வரும் அமெரிக்காவையும்    பிரிட்டனையும் எச்சரிக்கும் பொருட்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்த ஐ.நா. தலைமையகத்தை தாம் தாக்கியதாக தலிபான்கள்  தெரிவித்திருக்கின்றனர்.<span id="more-954"></span></p>
<p>பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து  ஐ.நா அலுவலகங்களை  என்ன செய்வது  என்ற  அச்ச நிலை  தோன்றியிருக்கிறது.  பாகிஸ்தானில் தலைநகர்  இஸ்லாமாபாத்திலுள்ள  ஐக்கிய நாடுகள் உலக  உணவு நிகழ்ச்சித் திட்ட  அலுவலகம்  மீதான தாக்குதலில் வெளிநாட்டவரும்  உயிரிழந்திருக்கிறார். </p>
<p>உலக உணவு நிகழ்ச்சித்  திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த  3 உத்தியோகத்தர்களும்  இக் குண்டுத் தாக்குதலில்  பலியாகியுள்ளனர்.  இத்தாக்குதல் தொடர்பில்  விடுக்கப்பட்டுள்ள கருத்துகளின் படி முழு உலகிற்குமே  துக்ககரமான சம்பவமாக  இது பார்க்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.  மேற்படி தாக்குதலில்   கொல்லப்பட்ட காயமடைந்த அனைவருக்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>இந்தத் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்களின்  பாதுகாப்புக்கு பாகிஸ்தானில் கேள்விக்குறியாகியிருக்கிறது. ஐ.நா வின்  பணியாளர்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படல் என்பவற்றைத் தாண்டி அலுவலகம் மீது தாக்கதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமாகப்  பார்க்கப்பட வேண்டியதாகும். சர்வதேச அமைப்புகள்  போராட்டக்காரர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறும் போது இவ்வாற ன  சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாமல்  போகலாம் என்பதற்கு  பாகிஸ்தானிலிருந்த ஐ.நா. அலுவலகம் மீதான தாக்குதலை நல்ல  உதாரணமாகக் கொள்ள முடியும்.  ஐ. நா. அலுவலகக் குண்டுத் தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியிருந்தனர்.</p>
<p>அதனைத் தொடர்ந்து பாகிஸ் தான் விமானப்படை வஸிரிஸ்தா னின் மகின் நவாஸ்கொட் பகுதிகளில் நட த்திய தாக்குத லில் ஆறு தலிபான்கள்  பலியானதுடன் மூன்று  பேர் காயமடைந்தனர்.  பாகிஸ்தானின் ஜெட்விமானங்கள் தலிபான்களின் மறைவிட ங்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இட ங்கள் மீது  தாக்குதலை நடத்தின. பாகிஸ்தானில் தலிபான்களை அழிப்பதற்காக இராணுவம் நீண்ட காலமாகப் போராடி வருகிறது. பெருந் தொகையான மக்கள்  அகதியானது மட்டுமே மிச்சம் என்ற நிலை மட்டுமே உருவகியிருக்கிறது.</p>
<p>இந்த நிலையில் நடைபெறும் தாக்குதல்கள் மோசமான விளைவுகøக் கொண்டு வரக் கூடும்என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பாக். விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. வஸிரிஸ்தானின் மகின் நவாஸ்கொட் பிரதேசங்களின் பாதைகளை மூடி பல்வேறு தடைகளை ஏற்படுத்தி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>தலிபான்கள் வஸிரிஸ்தானின் மகின் நவாஸ்கொட் பகுதிகளில் மறைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்ததாகவும் அதனால் தாம் தாக்குதலை  மேற்கொண்டதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.  பாகிஸ்தானுக்குள் வன்முறைகள் அதிகரித்துள்ளமைக்கு வஸிரிஸ்தானில் உள்ள  தலிபான்களே காரணம் என்றும் ஆப்கான், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தோற்றுவிப்போருக்கு வஸிரிஸ்தான் தளமாக இயங்குகிறது என பாக்.  இராணுவம் தெரிவித்திருக்கிறது. அதே வேளை இப்பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய தேவையுள்ளதாகவும்  இராணுவம் தெரிவித்திருக்கிறது.</p>
<p>ஆப்கானில் நேட்டோப் படைகள் தோல்வியடைந்தால் இஸ்லாமிய உலகில் தலிபான்களின் செல்வாக்கு அதிகரிக்கலாம் என மேற்குலகம் அஞ்சுகின்ற  நேரத்தில் பாகிஸ்தானிலிருந்த ஐ.நா.  அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியமை  மேலும் பிரச்சினையை  பெரிதாக்கியிருக்கிறது.  மேற்குலகம்  பயங்கரவாதத்திற்கெதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கூடாக முடிவு எட்டி விடப் போவதில்லை. தீர்வு தேவைப்படின் அடக்குமுறைகள் அற்றுப்போக வேண்டும் என்பது ஐ.நா. அலுவலகம் மீதான தாக்குதலால் சுட்டப்பட்டிருக்கிறது.<br />
 08.10.09</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/954/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/954/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/954/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/954/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/954/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/954/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/954/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/954/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/954/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/954/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=954&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கினியாவில் இராணுவ ஆட்சியாளர்களின் அட்டகாசத்துக்குப் பலியான போராட்டக்காரர்கள்.</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 12:58:43 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=952</guid>
		<description><![CDATA[இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் கினியாவில் திங்கட்கிழமை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு இரு தினங்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரிய கூட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அரசாங்கம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களையும் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த அறிவித்தலை இராணுவ ஆட்சியாளர் கப்டன் மௌஸா டாடிஸ் விடுத்தார். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=952&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="font-size:x-small;">இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் கினியாவில் திங்கட்கிழமை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு இரு தினங்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரிய கூட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இராணுவ அரசாங்கம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களையும் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த அறிவித்தலை இராணுவ ஆட்சியாளர் கப்டன் மௌஸா டாடிஸ் விடுத்தார். அதே வேளை கினியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது ஒழுங்கைக் குலைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<span id="more-952"></span></p>
<p><font size="2">கினியாவில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை ஐ. நா. செயலாளர் பான்கீமூன் கண்டித்துள்ளதுடன் அதிகாரப் பகிர்வுக்கு இரு தரப்பினரும் உடன் இணக்கப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பபுவாகினியா மக்களின் தாமாகவே முடிவெடுக்கும் உரிமை, சுதந்திரங்களை இராணுவ ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டுமெனவும் பராக் ஒபாமா கூறியுள்ளார்.</p>
<p>கினியாவில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் 157 பேரை இராணுவம் சுட்டுக் கொன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் அதிபராக இருந்த லன்சானா கோன்டே கடந்த டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து இராணுவத் தளபதியாக இருந்த மௌசா டாடிஸ் காமரா அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.</p>
<p>ஆனால் அவர், தான் தேர்தல் வரைக்கும் தான் பதவியில் இருக்கப் போவதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.இந்நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிடப் போவ தாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதையடுத்து அவர் தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆட்சியை மீண்டும் பிடிக்கத் திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து திங்கட்கிழமை சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கோனக்ரி நகரில் காமராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.</p>
<p>போராட்டக்காரர்கள் அமைதியாக ஒரு மைதானத்தில் கூடியிருந்த போது, அங்கு வந்த இராணுவம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டது. இதில் சுமார் 157 பேர் இறந்தனர். அவர்களில் 128 பேரின் உடல்கள் அந்நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 1200 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p>இராணுவ வீரர்கள் பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், பலரையும் தூக்கி சென்று பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>ஆனால், இராணுவத்தலைவர் கூறுகையில், இந்தத் தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை. கூட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் தனது கட்டளைக்கு அடிபணியாதவர்கள், கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இராணுவத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கினியாவில் இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வரை தமது போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என எதிர்க்கட்சியான கினிய மக்கள் கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.</p>
<p>அரசாங்கத்துக்கெதிரான எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவோர் எவராகயிருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படுமென்று இராணுவ ஆட்சியாளர் தெரிவித்திருக்கிற நிலையில் நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.</p>
<p>கினியாவின் ஜனாதிபதி காலமானதை அடுத்து இராணுவம் அந்நாட்டைப் பொறுப்பேற்றது. பின்னர் இராணுவத் தலைவர் ஆட்சிப்பீடமேறி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது.</p>
<p>இந்த வருட ஆரம்பத்தில் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கினியா நாட்டில் ஜனாதிபதி யாக இருந்த ஜோவா பெர்னாடோ நினோ வியர்ராவை இராணுவத்தினர் சுற்றிவளை த்து சுட்டுக் கொன்றனர்.</p>
<p>அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இராணுவப்புரட்சி வெடித்தது. இதில் அந்நாட்டு இராணுவத் தளபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையேயும் மோதலாக வெடித்தது. மார்ச் மாத ஆரம்பத்தில் இராணுவத் தலைமையகத்தில் ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் இராணுவ தளபதி படிஸ்டா டாக்மே நா வேய் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வீடு மீதும் இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.</p>
<p>இதனால் பயந்து போன ஜனாதிபதி வீட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை இராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.</p>
<p>போர்த்துக்கேயர்களின் காலனி நாடாக இருந்த இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஜோவா பெர்னாடோ நினோ வியர்ரா இருந்து வந்தார். இராணுவ சர்வாதிகாரியாக இருந்த அவர் 1990 களில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். பிறகு 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>உலக நாடுகளின் தலையீடுகள், ஐ.நா.வின் தலையீடுகள் எவ்வாறான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதனை நாம் கூற முடியாது. ஆனாலும் இப்போது நடந்து வருகின்ற போராட்டங்கள் கினியா நாட்டில் எவ்வாறான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதனை எதிர்வரும் ஜனவரிக்குள் நாம் கண்டுவிடலாம்.</p>
<p>01.10.09</p>
<p></font></span></p>
<p>&nbsp;</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/952/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/952/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/952/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/952/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/952/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/952/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/952/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/952/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/952/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/952/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=952&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/28/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சத்துருக்கொண்டான் படுகொலையின் 19ஆவது நினைவு</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/06/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/06/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 06 Oct 2009 18:27:56 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[சிவராம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொகுப்புகள்]]></category>
		<category><![CDATA[புகைப்படங்கள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[East]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Amparai]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[Sathurukondan massacre]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=932</guid>
		<description><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=932&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் <a href="http://tharakai.blogspot.com">தராக்கி</a> என அழைக்கப்படுகிற <a href="http://tharakai.blogspot.com">சிவாராம்</a> பற்றியே ஞாபகம் வரும்.</p>
<p><img class="alignnone size-full wp-image-933" title="DSCN0466" src="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0466.jpg?w=460&#038;h=345" alt="DSCN0466" width="460" height="345" /></p>
<p>நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.</p>
<p>அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.</p>
<p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.</p>
<p>றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.</p>
<p>அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.</p>
<p>அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.</p>
<p>சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.</p>
<p>சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.</p>
<p><em>மிகுதிப்படங்களைப் பார்க்க</em></p>
<p><span id="more-932"></span></p>
<p><strong>பனிச்சையடிச் சந்தியில் உள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற சத்துருக் கொண்டான் படுகொலை நினைவு தின நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் தவராசா, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அராணுவ அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</strong></p>
<p><strong><img class="alignnone size-full wp-image-934" title="CIMG1460" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1460.jpg?w=460&#038;h=613" alt="CIMG1460" width="460" height="613" /></strong></p>
<p><strong><img class="alignnone size-full wp-image-935" title="CIMG1466" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1466.jpg?w=460&#038;h=345" alt="CIMG1466" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignnone size-full wp-image-936" title="CIMG1469" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1469.jpg?w=460&#038;h=345" alt="CIMG1469" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignleft size-full wp-image-938" title="CIMG1473" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1473.jpg?w=460&#038;h=345" alt="CIMG1473" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignleft size-full wp-image-939" title="CIMG1471" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1471.jpg?w=460&#038;h=345" alt="CIMG1471" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignleft size-full wp-image-943" title="CIMG1491" src="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1491.jpg?w=460&#038;h=345" alt="CIMG1491" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignleft size-full wp-image-944" title="DSCN0465" src="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0465.jpg?w=460&#038;h=345" alt="DSCN0465" width="460" height="345" /></strong></p>
<p><strong><img class="alignleft size-full wp-image-945" title="DSCN0460" src="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0460.jpg?w=460&#038;h=345" alt="DSCN0460" width="460" height="345" /><br />
</strong></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/932/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/932/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/932/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/932/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/932/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/932/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/932/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/932/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/932/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/932/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=932&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/06/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0466.jpg" medium="image">
			<media:title type="html">DSCN0466</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1460.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1460</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1466.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1466</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1469.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1469</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1473.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1473</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1471.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1471</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/cimg1491.jpg" medium="image">
			<media:title type="html">CIMG1491</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0465.jpg" medium="image">
			<media:title type="html">DSCN0465</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0460.jpg" medium="image">
			<media:title type="html">DSCN0460</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈரான் அணுஆயுதத்தில் தங்கியிருக்கும் மத்திய கிழக்கின் அமெரிக்க ஆதிக்கம்.</title>
		<link>http://tharakai.wordpress.com/2009/10/02/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://tharakai.wordpress.com/2009/10/02/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 02 Oct 2009 01:08:12 +0000</pubDate>
		<dc:creator>Athiran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tharakai.wordpress.com/?p=959</guid>
		<description><![CDATA[அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்று ஈரானின் சபாநாயகர் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். ஈரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அலிலர்ஜானி இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஈரான் தமது நாட்டில் யுரேனியத்தைச் செறிவாக்கி மின்சக்தி உள்ளிட்ட சக்தி வளங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ள போதும் அதனை நிறுத்த வேண்டும் என்றே அமெரிக்கா கூறிவருகிறது.
இந்த வேளையில் மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=959&subd=tharakai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்று ஈரானின் சபாநாயகர் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். ஈரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அலிலர்ஜானி இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.</p>
<p>ஈரான் தமது நாட்டில் யுரேனியத்தைச் செறிவாக்கி மின்சக்தி உள்ளிட்ட சக்தி வளங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ள போதும் அதனை நிறுத்த வேண்டும் என்றே அமெரிக்கா கூறிவருகிறது.</p>
<p>இந்த வேளையில் மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்வு பெரும் பேராபத்தானதென ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலிலர்ஜானி தெரிவித்திருக்கிறார். பலஸ்தீனத்தின் ஹமாஸை ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் இஸ்ரேலுடன் இணங்கிச் செல்லுமாறும் கூறும் அமெரிக்கா இஸ்ரேலின் அநீதிகளைக் கண்டிக்கவில்லையெனவும் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார்.<span id="more-959"></span></p>
<p>மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைக்கும் யூதக்குடியேற்றங்களை ஏற்க முடியாதெனக் கூறும் அமெரிக்கா அதை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. 1967 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அரசாக ஏற்கும் படி வற்புறுத்துகின்றது.</p>
<p>இந்நிலையில் பராக் ஒபாமாவின் யோசனைகள் பேராபத்தை ஏற்படுத்துமெனக் கூறப்படுகிறது. இதற்காகவே பலஸ்தீனர்களின் நியாயத்திற்காக ஈரான் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை விஸ்தரிக்கிறது. பலஸ்தீனர்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு அமெரிக்கா மறைமுகமாகச் செயற்படுவதைத் தட்டிக்கேட்கவும் ஈரான் இப்பிரச்சினையில் அக்கறையுடனுள்ளதென்றும் அலிலர்ஜானி கூறியிருக்கிறார்.<br />
இந்த நிலையில் ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில், அந்த நாட்டுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது என்று தாமும், ரஷ்யாவும் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அரசுதுறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.</p>
<p>ஈரானுக்கு எதிராக மேலதிக தடைகளை கொண்டுவருவது தொடர்பில் ரஷ்யர்களை இணங்கச் செய்வதில், தற்போது மொஸ்கோவில் உள்ள ஹிலாரி கிளின்டன் தோல்வியடைந்துவிட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.அணுஆயுத விடயம் தொடர்பில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய அனைத்து வழிகளும் பிரயோசனமல்லாது போனால் மாத்திரமே தடை குறித்து ஆராய முடியும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியிருக்கிறார்.</p>
<p>அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்த சமரச பேச்சுக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஹிலாரி தெரிவித்திருக்கின்ற கருத்து பேச்சுக்களில் ஏற்பட்டு வருகின்ற முன்னேற்றத்தைக் குழப்புவதாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.<br />
உலக நாடுகளின் காவல்காரனாக இருப்பதற்கு விரும்பும் அமெரிக்காவுக்கே வேறு நாடுகளில் அணுஆயுதம் இருப்பது அல்லது உற்பத்தி செய்யப்படுவது பிரச்சினையாக இருக்கிறது.</p>
<p>அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா அண்மையில் கூறியிருந்தது. ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சு வார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் எதிர்பார்க்கின்றன.</p>
<p>உலகில் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் அமெரிக்காவுக்கு ஈரான், வடகொரியா போன்ற நாடுகளே தலையிடியாக உள்ளன.</p>
<p>உலகளவில் பலம் மிக்க நாடுகளுக்கு அணு ஆயுதச் செயற்பாடுகளிலேயே விருப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் அணு ஆயுதப் பலத்தை மேம்பட்ட நிலையில் கொண்டுள்ள அமெரிக்கா அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளில் உலகளவில் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே ரஷ்யாவின் ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனõதிபதி அண்மையில் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.வட கொரியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொண்ட அணுவாயுத தடைப்பரம்பல் ஒப்பந்தம் செயற்பாடு இழ ந்த நிலையில் இப் போதுள்ளது.<br />
ஈரானைப் பொறுத்தவரை தமது நாட்டில் நடைபெறும் யுரேனியச் செறிவாக்க சக்திவள மேம்பாட்டுக்கு மாத்திரமே என்பது வாதம். ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கு தயாராகி வருகிறது.</p>
<p>சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடம்கொடுக்காத ஈரான் தமது நாட்டின் செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகிறது. இதனைப் பொறுக்காத அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளை விதிக்க முயன்று வருகின்றன. ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.<br />
அணுச் செறிவாக்கல் செயற்பாடுகளில் ஈரான் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு அதன் நேச நாடுகளையும் பலமான நாடுகளையும் தம் வலைக்குள் விழுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது என்பதற்கு நல்ல உதாரணங்கள் பல இருக்கின்றன.</p>
<p>மேலும் மேலும் தடைகளை விஸ்தரிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகிறன என்றாலும் மத்தியகிழக்கின் ஆதிக்கத்தில் ஈரான் ஈடுபாடு காட்ட முனைந்திருப்பது இஸ்ரேலுக்குப் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது.</p>
<p>அரபு நாடுகளின் அக்கறையைப் பெற்ற நாடாக ஈரான் இருக்க முயற்சிப்பதற்கு ஒருவகையில் பிராந்திய நலன் சார்ந்த முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். பிராந்தியத்தில் இருக்கும் பலத்தைக் கொண்டு மேற்குலகின் முற்றுகைகளைச் சமாளிக்கும் நோக்கம் ஈரானுக்கு இருப்பதாகவே கொள்ளமுடிகிறது.</p>
<p>ஏவுகணை, ரொக்கெட், அணு ஆயுதத் தொழிற்பாடுகள் முன்னெடுக்கப்படாது நிறுத்தப்படுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செய்து கொண்டே இருக்கும் போதும் ஈரான் விடாப்படியாக இருப்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம்.<br />
அணு ஆயுத செயற்பாடுகளை நிறுத்தி பேச்சுக்கு வரும்படி வற்புறுத்துவமும் இராஜதந்திரத் தடைகளை விதிக்க எண்ணுவதும் அமெரிக்காவின் அச்சமான பயத்தையே காட்டுகிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் போன்ற ஒரு பலமான நாடு தமக்கு ஆதரவானதாக இருக்க வேண்டுமே தவிர ஈரான் போல் தமக்கு எதிரான நாடு இருக்கக் கூடாது என்றே அமெரிக்கா எண்ணுகிறது.</p>
<p>இந்த எண்ணம் பலித்து விட வேண்டுமானால் ஈரானின் மத்திய கிழக்கின் மீதான அக்கறை குறையவேண்டும். பலமும் குறைந்தாகவேண்டும். அது அணுஆயுத செறிவாக்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது என்பதே உண்மையாகும்.              <br />
15.10.09</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tharakai.wordpress.com/959/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tharakai.wordpress.com/959/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tharakai.wordpress.com/959/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tharakai.wordpress.com/959/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tharakai.wordpress.com/959/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tharakai.wordpress.com/959/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tharakai.wordpress.com/959/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tharakai.wordpress.com/959/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tharakai.wordpress.com/959/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tharakai.wordpress.com/959/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tharakai.wordpress.com&blog=3967610&post=959&subd=tharakai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://tharakai.wordpress.com/2009/10/02/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">அதிரன்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>